Skip to main content

நலமறிய ஆவல்




நீ ஒன்றை விரும்பினாய்

மனிதன் மின்னலை விரும்புவதைப் போல


நீ ஒன்றை

ஆழமாக மோகித்து விட்டாய்

அதுவோ 

தூர தூரத்தில்

உச்சியின் உச்சியில் வீற்றிருக்கிறது.


அம்மா நிலவைக் காட்டி

சோறூட்டுவதில்

ஒரு போதனை உள்ளது

துயரம் என்னவெனில்

அதை நாம் கற்பதில்லை


ஆசை அழிக்க முடியாத ஒரு மலர்

அது பிறக்கிறது

அழிவதென்னவோ

நீ 

அழிகையில்தான்.


நீ 

ஒன்றில் பித்தாகிவிடுகிறாய்

அதுவோ  ஆகப் பெரியது


ஆகவே

நீ

அதற்குப் பதிலாக

அது போல் ஒன்றை 

காதலிக்கத் துவங்குகிறாய்


உன் பெரியது

சிறிதளவே உள்ள சிறியது

நீ அதனுடன் 

சிரிக்கப் பழகுகிறாய்


இளையராஜவைத்தான் காதலிக்கிறோம் 

என்பதறியாமல்

ராஜாவைப் போல் பாடும்

பையன்களை சிநேகித்த அக்காக்கள்


கூடவே


ரஹ்மானைக் காதலிப்பதற்குப்  பதிலாக

சடை வளர்த்த பையன் பால்

மையல் பூத்து

மணமுடித்த தோழியர்கள்


யாவரும்  நலம்தானே

இப்போது?


Comments

யாவரும் நலம் தானே இப்போது?
இதுதான் இசை டச் .

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...