“சத்தியம் தோற்பதில்லை!" இதைச் சொன்ன போது என் நெஞ்சம் விம்மியது கண்கள் கொஞ்சம் கலங்கின முஷ்டி தானாகவே விண்ணை முட்டியது. "என்னையா அழைத்தாய்.."? என்று கேட்டு என்னை நோக்கி சத்தியங்கள் எழுந்து வந்தன. வெள்ளையில் கருப்பில் கருப்பு வெள்ளையில் பழுப்பில் ஆரஞ்சில் ஊதாவில் கலக்கவே முடியாத கலவைகளில் வானவில்லின் நிறத்தில் கூட ஒன்று இருந்தது. "என்னையா அழைத்தாய்...? இந்த முறை கொஞ்சம் சத்தமாக கேட்டன நான் அதைவிடச் சத்தமாய் அண்ணாந்து கூவினேன்... "எப்படியாயினும் ஏதோ ஒரு சத்தியம் தோற்பதில்லை" |
பெருந்திரள் கூட்டத்தில் தன் பிள்ளையின் சுண்டுவிரலை நைசாகக் கழற்றிவிட்டுவிட்டு விறுவிறு வென நடந்து மறைந்துவிடும் அன்னையர் சிலர் உண்டு அவர்களை நாம் அறிவோம் அந்தக் குழந்தையின் விழிகள் பிதுங்கி வாய் கோணுவதை ஒளிந்திருந்து நோக்கும் அன்னை ஒருத்தியும் உண்டு சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்! நம்ப விரும்ப மாட்டீர்!

Comments