Skip to main content

சரிவிலே எழுவதென்ன கண்ண பெருமானே !




பாடகர் பாடுகிறார்


பாடிக் கொண்டிருக்கிறார்


பாடிக் கொண்டிருக்கிறார்


பாடகர் 

‘பாடத்’ துவங்கும் தருணம்

என்றொன்றுண்டு


பாடகர் ‘பாடத் ‘ துவங்கி விட்டார்


“ ஓ..”

 என்றெழுந்ததொரு  வாத்தியம் 


“ம்”

என்றொரு வாத்தியம்


“ஆஹா..”

 என்று 

 எங்கோ துள்ளியதொரு வாத்தியம்


“ ச்….”

 கொட்டி மறைந்ததொரு வாத்தியம்


“வாவ்..” 

 வாய் திறந்து

 கூச்செரியும் வாத்தியங்கள் ஆங்காங்கு


 தாயைத் திட்டி 

 ஒரு கெட்ட வாத்தியம்


 பிளாஸ்டிக் சேர் வாத்தியங்கள்


செருப்புக் கால் வாத்தியங்கள்


நெஞ்சத்து ஆனந்தம்….

அது ஒரு நிகரற்ற வாத்தியம்


வாத்தியங்கள் 

கூடிக் கூடிப் பெருகியதில்

மேடை கொள்ளவில்லை


இதோ..


இந்த மேடை 

சமத்தில் சரிவதைக் காண்கிறேன்


மேடை, அரங்கு என்று

இரு வேறில்லை இப்போது


Comments

Thendral said…
மெட்டுக்கள்😊

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

பேய் பங்களா

வ சந்த மாளிகை என்பது காதலன் காதலிக்கோ காதலி காதலனுக்கோ கட்டி எழுப்பும் கட்டிடமல்ல காதல்,  மண்ணில் தோன்றுவதில்லை அதன் பிறப்பே வசந்தமாளிகையில்தான் அல்லது காதல் பிறந்த மறுகணமே மாளிகை  வான் அளாவ வளர்ந்துவிடுகிறது எழுப்பப்பட்ட மாளிகைகளில் எந்த மாளிகையும் தரைமட்டமாவதில்லை பூச்சுக்கள் உதிர்கின்றன ஆங்காங்கே புற்றுகள் வளர்கின்றன கோட்டான்கள் அலறுகின்றன எல்லா  இடிபாடுகளுக்கிடையேயும் நினைவுறுப் பேய்கள் அங்குமிங்குமாய் தாவிக் கொண்டிருக்கின்றன வாரத்தில்  ஒரு முறையேனும் நான் என் மாளிகை முன் அமர்ந்து நீண்ட சிகரெட்டைப் புகைப்பேன் ஒரு தீபாராதனை போல அந்தப் பேய்கள் வாழ்க என!

அதிர்ச்சி ரிப்போர்ட்

க டைசியில் அவன் அறிந்து கொண்டான் அவள் இல்லாத போதுதான் தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்கிற உண்மையை அதனினும் கடைசியாக அவன்  திடுக்கிட்டு அறிந்ததுவோ... மகிழ்ச்சியாக இருப்பதில்தான் என்னவோ  சிக்கல் அவனுக்கு