பயங்கரம் ஒரு அட்டவணையில் இருந்தது அழகு வேறொரு அட்டவணையின் கீழ் இருந்தது ஆயினும் இரண்டும் கண்ணொடு கண் நோக்கி அமர்ந்திருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அழகு பயங்கரமாகி வந்தது. பயங்கரம் அழகு கொண்டு எழுந்தது. அழகிற்காக மனிதத் தலையொன்று மண்ணில் துண்டாகி வீழ்ந்தபோது அழகு பயங்கரமாகிவிட்டது. பயங்கரம் என்று அறிந்திருந்தும் அதைத் திரும்பத் திரும்ப காண உந்தும் துடிதுடிப்பில் பயங்கரம் அழகாகிவிட்டது. பயங்கர அழகே! நான் சின்னஞ்சிறுவன் எனக்கு வழிவிடு! |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments