Skip to main content

இரண்டு உறுதிகள்



“ஒன்பது மணிக்கு சடோன்னு

தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..”


வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா


மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும்

தனிக் கல்யாணி

மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே

மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள்


பரிமளாவிற்கும்

கல்யாணிக்கும் தீராத பகை

மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு

அதுவும்  நாலு முக்கில் வைத்து 


பரிமளாவிற்கு கல்யாணியுடன்

ராசி ஆக வேண்டும் என்று

ஒரு அவசியமுமில்லை

சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது

இது உறுதி.


மொத்த வீதிக்குமான கூவலே எனினும்

அதைக் 

கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள்

இதுவும் உறுதி.


Comments

Anonymous said…
காலையிலேயே மனம் நெகிழும் ஒரு மிகச்சிறந்த கவிதையை தந்தமைக்கு நன்றிகள். பகைமை பாராட்டினாலும் பரிமளாவோடு பாராட்ட வேண்டும். இந்த மிகச்சிறந்த கவிதை இந்த உங்களையும் பாராட்ட வேண்டும்
Anonymous said…
பகையின் நெருப்பில் ஒளிரும் அன்பின் துளி.

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.