ஒருமையை உழுகையில் முதல் போகம் விளைகிற து மரியாதை மிகவும் மரியாதையானது உயர்தரத்து வாசனை திரவியம் பட்டுச் சரிகையின் டாலடிப்பு வானளாவிய கட் அவுட் கீழ்படிதலுள்ள மாணவனின் விண்ணப்பம் காதலோ சேற்றுப் பன்றிகளின் கும்மாளம் ஒருவர் மீது ஒருவர் ஏறிப்படுக்கும் இட நெருக்கடி மரியாதையின் பாதுகாப்பான இடைவெளியிலிருந்து காதலின் கட்டற்ற களிப்பிற்கு மெல்ல அழைத்துச் செல்கிறது ஒருமை ‘டா’ வும், ‘டி’ யும் முதன்முறை மூக்குரசிக் கொள்கையில் சடசடத்ததெதுவோ அதைத் தேடித்தான் படுக்கையைக் கிளறுகின்றன இரண்டு அம்மண உடல்கள். 000 பார்த்திருத்தல் “வானத்தை அண்ணாந்து பார்க்கையில் மனிதன் ஏன் அவ்வளவு விடுதலையடைகிறான்?” என்று கேட்டான் ஒரு நண்பன். அந்தக் கேள்விக்கு விரிவாக விடையளிக்கும் தோரணையில் நானும் அண்ணாந்து பார்த்தேன் வானத்தை அவன் பதிலறிவதற்காகக் கேட்கவில்லை. நானும் பதிலளிப்பதற்காக பார்க்கவில்லை 000 ‘ஆலாப்’பில் மிதக்கும் அலுவலகம் எவனோ ஒருவன் காற்றில் ஒரு ‘ஆலாப்’பை ஏற்றி விட்டிருக்கிறான் அது ஒரு அரசு அலுவலகத்துள் நுழைகிறது கோப்புகள் கலைகின்றன தாள்கள் படபடக்கின்றன நிலம் குலுங்குகிறது ஒருவரும் அலறவில்லை கண்ணாடிகள் உடைந்து நொறுங...
“உ ங்களுக்கு சினிமாவிற்குப் பாட்டெழுதும் விருப்பம் உள்ளதா?” இந்தக் கேள்வியை சில சமயங்களில் எதிர் கொண்டிருக்கிறேன். “ உள்ளது” என்பதுதான் பதில். முழு நேரப்பாடலாசிரியராக ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசையில்லை. ஆனால் என் சொல், ஒரு பியானோவோடு கூடி முயங்கும் இன்பத்தைக் காணும் ஆவல் உள்ளது. சொல்லொன்று பாட்டாக மாறித்துள்ளும் தருணத்தின் பரிதவிப்பை அள்ளிப் பருகும் வேட்கை உள்ளது. இதில் குற்றம் ஏதுமிருப்பதாக நான் எண்ணவில்லை. எவ்வளவு முரட்டுத்தனத்துடன் ‘இசை’ என்று எனக்கு நானே பெயர் சூட்டிக் கொண்டேனோ, அந்த முட்டாள் தனத்தின் சுகம் இன்னும் நெஞ்சு நிறைய இருந்து கொண்டுதான் இருக்கிறது. உங்களால் கவிதையையும் பாட்டையும் தெளிவாகக் காணமுடிமெனில் நீங்கள் இரண்டையும் குழப்பிக் கொள்ள அவசியமிருக்காது. மேல் கீழ் என்றல்ல, தனித்தனி என்றே நான் சினிமாப்பாடலையும் கவிதையையும் புரிந்து வைத்துள்ளேன் திரையிசைப் பாடல்கள் எங்கும் நிறைந்துள்ளன. அது குறித்து இங்கு நாள் தவறாது பேசப்படுகிறது.” பழைய பாடல்களா? புதிய பாடல்களா? “ என்று துவங்கிய ஒரு பட்டிமன்றம் அந்தப் புதிய பாடல்களெ...