Skip to main content

Posts

இசை கவிதைகள்

ஒருமையை உழுகையில் முதல் போகம் விளைகிற து மரியாதை மிகவும் மரியாதையானது உயர்தரத்து வாசனை திரவியம் பட்டுச் சரிகையின் டாலடிப்பு வானளாவிய கட் அவுட் கீழ்படிதலுள்ள மாணவனின் விண்ணப்பம் காதலோ சேற்றுப் பன்றிகளின் கும்மாளம் ஒருவர் மீது ஒருவர் ஏறிப்படுக்கும் இட நெருக்கடி மரியாதையின் பாதுகாப்பான இடைவெளியிலிருந்து காதலின் கட்டற்ற களிப்பிற்கு மெல்ல அழைத்துச் செல்கிறது ஒருமை ‘டா’ வும், ‘டி’ யும் முதன்முறை மூக்குரசிக் கொள்கையில் சடசடத்ததெதுவோ அதைத் தேடித்தான் படுக்கையைக் கிளறுகின்றன இரண்டு அம்மண உடல்கள். 000 பார்த்திருத்தல் “வானத்தை அண்ணாந்து பார்க்கையில் மனிதன் ஏன் அவ்வளவு விடுதலையடைகிறான்?” என்று கேட்டான் ஒரு நண்பன். அந்தக் கேள்விக்கு விரிவாக விடையளிக்கும் தோரணையில் நானும் அண்ணாந்து பார்த்தேன் வானத்தை அவன் பதிலறிவதற்காகக் கேட்கவில்லை. நானும் பதிலளிப்பதற்காக பார்க்கவில்லை 000 ‘ஆலாப்’பில் மிதக்கும் அலுவலகம் எவனோ ஒருவன் காற்றில் ஒரு ‘ஆலாப்’பை ஏற்றி விட்டிருக்கிறான் அது ஒரு அரசு அலுவலகத்துள் நுழைகிறது கோப்புகள் கலைகின்றன தாள்கள் படபடக்கின்றன நிலம் குலுங்குகிறது ஒருவரும் அலறவில்லை கண்ணாடிகள் உடைந்து நொறுங...
Recent posts

கவிதையின் பாட்டும், பாட்டின் கவிதையும்

“உ ங்களுக்கு சினிமாவிற்குப்  பாட்டெழுதும் விருப்பம் உள்ளதா?”  இந்தக் கேள்வியை சில சமயங்களில் எதிர் கொண்டிருக்கிறேன். “ உள்ளது” என்பதுதான் பதில். முழு நேரப்பாடலாசிரியராக ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசையில்லை. ஆனால் என் சொல்,  ஒரு பியானோவோடு  கூடி முயங்கும் இன்பத்தைக் காணும் ஆவல் உள்ளது. சொல்லொன்று  பாட்டாக   மாறித்துள்ளும் தருணத்தின் பரிதவிப்பை  அள்ளிப் பருகும் வேட்கை உள்ளது. இதில் குற்றம் ஏதுமிருப்பதாக நான் எண்ணவில்லை.  எவ்வளவு முரட்டுத்தனத்துடன் ‘இசை’ என்று எனக்கு நானே பெயர் சூட்டிக் கொண்டேனோ, அந்த முட்டாள் தனத்தின் சுகம் இன்னும் நெஞ்சு நிறைய இருந்து கொண்டுதான் இருக்கிறது. உங்களால் கவிதையையும் பாட்டையும் தெளிவாகக் காணமுடிமெனில் நீங்கள் இரண்டையும் குழப்பிக் கொள்ள அவசியமிருக்காது. மேல் கீழ் என்றல்ல, தனித்தனி என்றே நான் சினிமாப்பாடலையும் கவிதையையும் புரிந்து வைத்துள்ளேன் திரையிசைப் பாடல்கள் எங்கும் நிறைந்துள்ளன. அது குறித்து இங்கு நாள் தவறாது பேசப்படுகிறது.” பழைய பாடல்களா?  புதிய பாடல்களா? “ என்று துவங்கிய ஒரு பட்டிமன்றம் அந்தப் புதிய பாடல்களெ...

அன்பெனும் பெருவெளி: கூட்டுக்களி

“அ ன்பெனும் பெருவெளி”  தமிழ் வாழ்வில் வள்ளலாரின் இடத்தை வகுத்துரைக்கும் ஒரு ஆவணப்படம்.  தமிழ் பக்தி மரபில்  சீர்திருத்தவாதியாக அறியப்படுபவர் அவர். திருவருட்பாவின் ஆறாம் திருமுறையால் ஒரு கவிஞராக உருவெடுத்திருந்தாலும் அவர் பெரும்பாலும் அப்படி எண்ணப்படுவதில்லை. ஆனால் பாரதிக்கு முன்பாக தமிழின் குறிப்பிடத்தக்க ஒரு கவியாக அவர் இருந்துள்ளார்.  துறவியின் தோற்றத்தில் தோன்றினாலும்  “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் “ ,  மேல்வருணம் தோல் வருணம் கண்டார் இலை”,  “குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று” என்பது போன்ற , அவர் காலத்திற்கான ஆக்ரோஷமான வரிகளால் ஒரு புரட்சிக்காரர் போலவே அவர் நினைவு கூரப்பட்டு வருகிறார் இந்த ஆவணப்படத்தை    வள்ளலார் குறித்ததென்றும் , இசை குறித்ததென்றும் இரண்டு விதமாகப்  பகுக்கலாம்.  இரண்டும் தனித்தனியே அமையாமல் ஒன்றுள் ஒன்று அமர்ந்திருப்பதால் கலவையின்பத்தின் மகிழ்ச்சியொன்று நமக்கு வாய்க்கிறது.  வள்ளலாரின் ஆறு பாடல்கள்  இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன. நமது பக்திப் பாடல்களுக்கென்று  கைக்கொள்ளப்படும் ‘ காதலாகிக் ...

நோக்க நோக்கக் களியாட்டம்

தமிழ்க் கவிதையில் அமங்கலம் குறைந்து மங்கலம் பெருகி வருவது குறித்து ஒரு  நண்பருடன்  நீண்ட விவாதம்  நடந்தது. உரையாடலின் முடிவில் கமறிய குரலில் சொன்னேன்... "இந்தத் தீங்கு எதுவரை சென்று விட்டதென்றால் மனைவிக்கு காதல் கவிதைகள் எழுதுவது  வரை சென்று விட்டது..." கவிஞர் மதாரின் " மாயப்பாறை"  நூல் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.  வாசிப்பதற்கான இணைப்பு இது. https://akazhonline.com/?p=9507&fbclid=IwY2xjawIJeKpleHRuA2FlbQIxMQABHeQnpluZo9AIm-Mw2o4cpyiBpkzfGdiR8nH8muFIi4v2i-RUg7Net_0hTQ_aem_f28eMbBgWz4H86bZljLnfg&sfnsn=wiwspwa

ஒரேயடியாக

தூ ர  தேசத்தில் படித்துக் கொண்டிருக்கிற மகள் வாரம் நான்கு ‘செல்பி” களை அனுப்புவாள் ஒரே முகமெனத்  தோன்றினாலும் ஒரே முகமில்லை அதே முகம் போல் தெரிந்தாலும் பழைய முகமில்லை தொட்டிலில் கிடந்தவள் முதன் முதலாகக் கை நீட்டி என் மூக்கைத் தொட்டது போல ஒவ்வொரு படமும் என்னை  எங்கெங்கோ தொடுகின்றன இந்த இரவில் அவள் செய்தியைத் திறந்து பார்த்த போது  அங்கு அவளுக்குப் பதில் சிரித்துக் கொண்டிருக்கிறது ஒரு அந்தி  பார்க்கிறேன்… பார்க்கிறேன்… பார்த்துக் கொண்டேயிருக்கிறேன் இதை அப்படி  ஒரேயடியாக ‘செல்பி’யில்லை என்று சொல்லிவிட  முடியாது.

சப்பாத்தியை சாதாரணமாகக் கருதி விட முடியாது

ஒ ரு முறை என் தாள வாத்தியார் என்னைக் கடிந்து கொண்டார்.. " நீ என்ன  சப்பாத்திக்கா  குத்துற... ?  மனம்....மனம் இழையனும்..." அவரே இன்னொரு முறை திரும்பவும் கடிந்தார்... " பெரிய வித்வானா  நீ... ?   சும்மா குத்து.... சப்பாத்திக்கு  குத்தற    மாதிரி குத்து...." கடைசியில் எல்லாம் அந்தச் சப்பாத்தியில்தான் இருக்கிறது போலும்?

" நீ மட்டுமே….”

ம றுமுனையில்  காதலன்  விடாது கெஞ்சிக் கொண்டேயிருக்கிறான் இவளோ தலையை ஆட்டி மண்ணைக் கீறி நாணி நாணி கோணிக் கோணி  மறுத்துக் கொண்டிருக்கிறாள் கடைசியில் ஒத்துக் கொண்டாள் " ஒரே ஒரு வரி ..." அவளுக்கு கொஞ்சம் தள்ளி அமர்ந்திருக்கிறான் இந்தத் தடியன் ஆகவே அவள் குரலில் ரகசியத்தைக் குழைக்கிறாள் ரகசியம் பேச்சையே பாட்டாக்குவது பாட்டை அது என்னென்ன செய்யும்  அடுத்த முறை இன்னும்  அவளை நெருங்கி அமர்வேன் இன்னும்  அவளை ரகசியமாக்குவேன்.