Skip to main content

Posts

Showing posts from 2016

விபத்து

பதினோரு கால்களையும் ஊன்றி இருபத்தைந்து  கைகளிலும் பற்றி எவ்வளவோ இழுத்துப் பிடித்தேன் அந்தச் சொல்லை ஆனாலும், அது உன் மீது மோதி விட்டது.

சத்தம்

இந்த உலகத்தில் தேவையற்ற சத்தங்கள் நிறைய. அதில் ஆகக்கொடூரமானது சிரிப்புச்சத்தம். அது எப்போதும் சிரிக்க வக்கற்றவனின் நடுமண்டையில் விழுகிறது.

மார்கழி- 01

                              நான்கு நாய்கள் எங்கள் தெருவிற்குள் மார்கழியை இழுத்து வந்தன.

”குக்கூ” என்காதோ கோழி !

                                                                        ஆமாம்...அவர் என் வாத்தியார். வாத்தியார் தான். குரு அல்ல. குருவெனில் அவர் ஆடைகளை துவைத்துப் போட வேண்டும். வனத்தினில் புகுந்து உள்ளதிலேயே நல்ல பழங்களாக பறித்து வந்து பசியாற்ற வேண்டும். மடிதனில் கிடத்தி உறங்க வைக்க வேண்டும். அப்போது ஒரு வண்டு நம் தொடையைத் ஆழத்துளைத்து மறுபுறமாகப் பறந்து போனாலும் , பற்களைக் கடித்துக் கொண்டு, முகத்தை முந்நூறு கோணலாக்கி அவர் நித்திரையைக் காக்க வேண்டும்.எல்லாம் செய்து விட்டு கடைசியாக கமண்டல நீரால் சாபமும் வாங்க வேண்டும். வாத்தியாரெனில் இருக்கும் இரண்டு தலையணைகளை ஆளுக்கொன்றாக வைத்துக் கொள்ளலாம். “ ஏனோ கால் வலிக்கிற மாதிரி இருக்கு... “ என்று வாத்தியார் முனகினால்  “ நல்லா தூங்கி எந்திருச்சா எல்லா சரியா போயிடும்.. பேசமா படுங்க...: ”    என்று அதட்டி தூங்க வைத்து விடலாம். அதாவது நம் தலையணையை அவர் காலணையாக்க வேண்டிய அவசியமேதுமில்லை.     இரண்டாயிரத்தின் துவக்கத்தில்  இளஞ்சேரல், பொன்.இளவேனில், செல்வராசு, கணேசன் ஆகிய நண்பர்களுடன் நானும் சேர்ந்து “பாரதி இலக்கியப் பேரவை “ என்று ஒரு

அன்புள்ள இசை

                                                        அன்புள்ள இசை,       நேற்று உங்களின் ‘ஆட்டுதி அமுதே’ தொகுப்பை வாசித்தேன். முன்னுரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தது போல உங்கள் கவிதைகளை வாசிக்கும் போது முகம் மலர்பவர்களில் நானும் ஒருவன்.உங்கள் புனைப்பெயர் உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.இசையைப் போலவே உங்கள் எழுத்துகளின் வழியே நீங்கள் வாசகனை மலர்த்துகிறீர்கள்.வெறும் மலர்த்தல் மட்டுமல்ல… நான் கவனிக்கத்தவறிய பலவற்றை நேரடியான மொழியில், பகடியான தொனியில் காட்சிப்படுத்துவதுதான் உங்களது தனித்துவம்.பெரும்பாலும் நவீன கவிதைகளை படிக்கும்போது சிறிது நேரத்தில் ஒரு அயற்ச்சி வந்துவிடும்.காரணம்,சிக்கலான படிமங்கள்,குறியீடுகள்,இறுகிய மொழிநடை,புரியாத்தன்மையால் மறுவாசிப்பைக் கோருபவை என்று அவை இருக்கும்.மேலும்,நான் அடிப்படையில் சற்று சோம்பேறி என்பதாலும்,அவசரம் பிடித்தவன் என்பதாலும் என்னதான் கவிதைகள் மீது ஆர்வமும்,வேட்கையும் கொண்டிருந்தாலும் சில சமயங்களில் எரிச்சல் வந்துவிடும்.புரிய மாட்டீங்குதே என்று.ஆனால் உங்கள் கவிதைகள் பெரும்பாலும் முதல் வாசிப்பிலேயே புரிந்து விடுகின்றன.(என்பதால் சிங்க

உலகு

                                                    இடையில் இருப்பவர்க்கு காற்றென்றால் அறவே ஆகாது கடைசியில் உள்ளவருக்கு கிளியனார் கொஞ்சலன்ன லேசாக அலச வேண்டும். ஜன்னலோரத்தானுக்கோ அது வழியே உலகமே தெரிய வேண்டும் ஒத்தைக்கண்ணாடி படாத பாடு படுவதைப் பார்.

DEMONETISATION

                                              அவள் ஜாதகத்தில் ஏதோ பிசகு பிறந்ததிலிருந்தே அவளுக்கு ஒன்றும் கிடைத்ததில்லை ஒழுகாத வீடு கிடைத்ததில்லை ஒழுங்கான கல்வி கிடைத்ததில்லை தகப்பனைக் காணவில்லை சரியான காலத்தில் ருதுவாகவில்லை சரியான காலத்தில் மணமாகவில்லை புருஷன் வீடு தங்குவதில்லை வயிற்றில் கருத் தங்குவதில்லை எனவே புத்தி ஒரு ஒழுங்கில் இல்லை எந்த அசதியாலும் அவளை தூங்க வைக்க இயலவில்லை எத்தனை அடி உயரத்திலிருந்து விழுகின்ற போதிலும் எந்தக் கோமாளியாலும்       அவளைச் சிரிக்க வைக்கக் கூடவில்லை அவள் முறை வருகையில் வெறுங் கையை நீட்டுவதுதான் இவ்வுலகத்து வரிசைகளின் இயல்பு. ஆனால் அதிசயமாக அவளுக்கு ஒரு புது 500 ரூபாய் கிடைத்துவிட்டது “ சக்சஸ்....”  என்றவள் கத்திய கத்திற்கு  கடவுளின் இமைகளில் நீர் கோர்த்து விட்டது     அவர் அதைச் சுண்டியெறிய, நேற்று வெளுத்துக் கட்டிய மழை அதுதான்.

இன்று ஒரு தகவல் !

                                                 பிள்ளைப் பிராயத்தில் எப்போதாவது குளிப்பேன் அடித்தால் பல் துலக்குவேன் அறிவு வளர்ந்த பிறகு தவறாது குளித்தேன் தினசரி பல்துலக்கினேன். ” ஆலும் வேலும் பல்லுக்குறுதி ” என்றான் ஒருவன். நான் அதை நம்பினேன். இன்னொருவன் வந்தான்... பல்லிடுக்கு, நுண்கிருமி என்றெல்லாம் பயங்கரக் கதைகள் சொன்னான். உடனடியாக நெளிந்து வளைந்த புருசுக்கு மாறினேன். பிறகொருவன்  சொன்னான்.. “ ஒரு துலக்கால் பண்ணிரண்டு மணி நேரத்தைத் தான் பாதுகாக்க இயலும்.. ” பல் போனால் சொல் போச்சு... நான் அன்றிரவே இதுவரை தவற விட்ட எல்லா இரவுக்குமாய் சேர்த்துத் துலக்கினேன். என்னிடம் உள்ள ஒரே நல்லொழுக்கம் புகையாமை மட்டுந்தான் நேற்றொருவன் எச்சரிக்கிறான்... “ நீ ஒரு முறை பல் துலக்குவது ஆறு சிகரெட் புகைப்பதற்குச்  சமம்.. ”  பல்முளைத்த காலந்தொட்டு  நான் துலக்கோதுலக்கென்று துலக்கி வரும் பற்பசையில்  நிக்கோடின் கலந்துள்ளதாம்.  நாளையிலிருந்து  நாள் ஒரு தகவலாக அழித்துக் கொள்ள இருக்கிறேன்.

119

                                     இந்தமுறை உன்னை உறுதியாக அறுத்து விட்டேன் இனி எங்கேனும் வழியில் கண்டால் தலையாட்டிக் கொள்வதென. எப்படி  ஆட்ட வேண்டுமென்று ஆட்டியாட்டிப் பார்ப்பது இது 119 வது முறை.

சீன்

உண்மையில் இது ஒரு நகைச்சுவைக் காட்சி இசை நீ மட்டும்  கொஞ்சம் மனசு வைத்தால் இந்த சீனிற்கு சிரித்து விடலாம்.

நோய் – வாய்ப் - படுதல்

                                                                                                                                                                                                                    அவ்வளவு வலுக்கட்டாயமாக தலையை வலப்பக்கம் திருப்பிக் கொள்ளாதே பிறகு ஒரு நூறு கைகள் ஒன்று கூடி அதை இடப்பக்கம் இழுக்கும்                                    நன்றி : கல்கி தீபாவளி மலர்

ஆண்பால் – பெண்பால் – அன்பால்

                                                         “ குடும்பம் எனும் வலிய தாம்புக்கயிற்றால்  இழுத்துக் கட்டபட்டிருக்கும் 72 கிலோ எடையுள்ள நாய் நான்..” ”  இது என்னுடைய வரி தான். இந்தக் கட்டுரையை துவங்கும் முன் அந்த நாயிடம் நான் சொல்லிக் கொள்வதெல்லாம் “ எவ்வளவு புரட்சிக்குறைவாக தோன்றினாலும் உண்மையையே குரை “ ”என்பதையே.       “ அந்திக்கருக்கலில் ஒரு மனிதன் நடந்து வந்துகொண்டிருந்தான் ” ” என்கிற வரியை ஒருவர் வாசிப்பதாகக் கொள்வோம். அவர் மனதில் விரியும் “மனிதன் “ நிச்சயம் ஒரு ஆண்தான். நமது மொழி ஆண் மையப்படுத்தப்பட்டது  என்பதை ஒரு எழுத்தாளனாக என்னால் அடிக்கடி உணர முடிந்திருக்கிறது. பள்ளிப்பருவத்தில் ஒரு மிஸ் ஏதோ ஒரு பொருளைக் கொடுத்து , டீச்சர்ஸ் ரூமில் இருக்கும் இன்னொரு மிஸ்ஸிடம் கொடுத்து வரச்சொன்னார். நான் பள்ளி முழுக்க தேடியலைந்து விட்டு திரும்ப வந்து அதை அவரிடமே கொடுத்து விட்டேன். ஏனெனில் பள்ளியில் “ ஆசிரியர் அறை “ தான் இருந்தது. “ ஆசிரியைகள் அறை “ யை எங்கு தேடியும் காண வில்லை. “ ஆசிரியர் அறை “ என்றால் அங்கு மாஸ்டர்கள் மட்டும் தான் இருப்பார்கள் என்று என் புத்தி