தூரநிலத்தில் என்னை வரவேற்க காத்திருக்கும் நண்பன் நான் அவசியம் அவன் வீட்டிற்கு வரவேண்டுமென்றும் அங்கு அவன் மனைவியும் குழந்தைகளும் என் வருகைக்காக ஆவலோடு காத்திருப்பதாகவும் சொன்னான் நான் அவன் முதுகிற்கு பின் இறங்கி ஒரு ஆட்டோவைப் பிடித்து ஓடினேன் இந்த மொட்டை வெய்யிலில் நின்றுகொண்டு எடுக்கவே எடுக்காத என் எண்னை திரும்ப திரும்ப அழைத்துக் கொண்டிருக்காதே... போய்க்கோடா நண்பா !