இன்று அதிகாலையில் சுந்தரமூர்த்தியை திடீரென மகிழ்ச்சி பிடித்துக் கொண்டது . வீட்டிலிருந்து பணிமனைக்கு காற்றுவெளியினில் பயணம் போகிறார் . கியரையும் , ப்ரேக்கையும் கடவுள் கவனித்துக் கொண்டார் . வானம் “ மெல்ல தூறவா ? “ என்று கேட்டது . அவர் “ இம் ” கொட்ட , அப்படியே ஆனது . “ ராஜா “ அவர் நாவில் வந்தமர்ந்தார் . தோளினை ச் சுற்றிக்கட்டிய அவ்வளைக்கரம் ஒரு நட்சத்திர நடிகையுடையது . சந்தோஷமென்றால் சந்தோஷம் அவ்வளவு சந்தோஷம் … அலுவலகம் தாண்டியும் போகிறார் . வே றெ ங்கோ போகிறார் . அவர் சந்தோஷமாக இருப்பது அவருக்கே தெரியவில்லை . ஆகவே அவ்வாறிருந்தார் . மற்றபடி , அதற்கொரு காரணம் கேட்டால் அவரெங்கு போவார் எம்மானே ? நன்றி : கொம்பு மூன்றாவது இதழ்