உன்னித்தெழுந்த தடமுலைகள் இரண்டொடும் ஆறாயிரத்தி சொச்சம் இராத்திரிகள் கட்டிப்புரண்டாள். கடைசியில் ஒரு கிழவனை வைத்து அவற்றை வென்றாள் சீக்கிரமே தீர்ந்ததவன் சரப்புட்டி விழித்தெழுந்த முலையிரண்டும் ஆளுக்கொரு தோள் பற்றி அவள் தலை மீதேறி ஆட்டமாய் ஆட்டம் பேயாட்டம்... ருசி கண்ட பூனை சமயங்களில் சங்கிலி பிணித்த யானை. அவளுக்கும் வருகிறதொரு மார்கழி! அவளும் வைக்கிறாள் பூசணி !