Skip to main content

Posts

Showing posts from August, 2013

எவ்வளவு பெரிய கருணை

உருவியதும் தெரியாமல் செருகியதும் தெரியாமல் ஒரு குத்து.. ஒரே ஒரு குத்து.. எவ்வளவு பெரிய கருணை இது.. குத்திடிவேன்.. குத்திடிவேன் என்று சும்மா மிரட்டாதே கொலைகாரா!

துஞ்சா மட நெஞ்சே !

  பெருந்திணையில் பாலையுண்டு.. பெருந்திணைக்கு தூதுமுண்டு.. தூது சென்ற நிலவு கெடு செய்தி கொண்டு  திரும்பியது. சாஸ்திரத்தின் இரும்புக் கதவு அடித்துச் சாத்தியதில் அதற்கு ஆறாத நெற்றிக்காயம் . பெருந்திணைக்கும் நினைவுகளுண்டு. அவற்றைத் தூக்கி அட்டாலியில் எறிந்து விடமுடியாது  பெருந்திணைக்காரன் அழுகிறான்  அதில் அசலான கண்ணீரின்  அதே அளவு  உப்பு.  துஞ்சா மட நெஞ்சை துயில் அமர்த்த‌  பாடத் துவங்குகிறான்..  " இவ் அளவு  இட்டதே  பெரும்பிச்சை.. "  என்று   தளும்புகிறதப்பாடல்.