பெருந்திணையில் பாலையுண்டு.. பெருந்திணைக்கு தூதுமுண்டு.. தூது சென்ற நிலவு கெடு செய்தி கொண்டு திரும்பியது. சாஸ்திரத்தின் இரும்புக் கதவு அடித்துச் சாத்தியதில் அதற்கு ஆறாத நெற்றிக்காயம் . பெருந்திணைக்கும் நினைவுகளுண்டு. அவற்றைத் தூக்கி அட்டாலியில் எறிந்து விடமுடியாது பெருந்திணைக்காரன் அழுகிறான் அதில் அசலான கண்ணீரின் அதே அளவு உப்பு. துஞ்சா மட நெஞ்சை துயில் அமர்த்த பாடத் துவங்குகிறான்.. " இவ் அளவு இட்டதே பெரும்பிச்சை.. " என்று தளும்புகிறதப்பாடல்.