Skip to main content

Posts

Showing posts from 2013

வருக என் வாணிஸ்ரீ

   நீ எங்கு தான் இருக்கிறாய்   வாணிஸ்ரீ? உன் தூக்கிக்கட்டிய கொண்டையை நான் காணவேண்டாமா ? இந்த மழைக்காலத்தில் எல்லா பேருந்து நிறுத்தத்திலும் ஆள் நிறுத்தியிருக்கிறேன். சன்னலோரம் அமர்ந்து நீர்த்துளிகளைப் பிடித்து விளையாடியவாறு நீ வந்துவிடுவாயென.. எல்லோரும் திரும்பி வந்து உதட்டைப் பிதுக்குகிறார்கள். குருட்டுப்பிச்சைக்காரனுக்கு சாலையைக் கடக்க உதவிக்கொண்டிருந்தாள் ஒருத்தி.. நான் ஓடிப்போய் நீ வாணிஸ்ரீ தானே என்று கேட்டேன். அவளும் உதட்டைப் பிதுக்கி விட்டுப் போகிறாள். நீ வந்து அழகானதொரு கிண்ணத்தில்                   செக்கச்சிவந்த உன்உதிரம் நிரப்பித் தரவில்லையென்று தானே இப்படி   கள் மேல் காதல் கொண்டு திரிகிறேன். எங்கு தான் இருக்கிறாய்   வாணிஸ்ரீ? வந்துகொண்டிருக்கிறாயா அல்லது இல்லவே இல்லையா ? 

தற்கொலைக் கவிதைகள் 'க்ளிஷே' ஆகி விட்டன.

     அ.         காற்று வாங்கியபடி    தண்டவாளத்தின் ஓரமாய் நடந்து கொண்டிருந்தவனை   ஒரு குறுஞ்செய்தி வந்தடைந்தது. பிறகு தண்டவாளத்தில் இறங்கி நடந்தான்   ஆ என்னைக் கடந்து போன பூனை தெருமூலையில் சுருண்டு விழுந்து செத்தது. வெட்கம் என் நெஞ்சைப் பிடுங்கித் தின்கிறது   இ.  கண்ணீர் அஞ்சிலிப் போஸ்டைரை   பார்க்க பார்க்க  ஆசையாக இருக்கிறது   ஈ.      மொட்டை வெயிலில்   ரோட்ரோமாய் சரிந்து கிடக்கிறான் ஒரு குடிகாரன்.     என்   “   IN”   செய்த சட்டையை    யாரேனும் எடுத்து விடுங்கள்..    நானும் தூங்க வேண்டும். உ.  அந்தக் குவார்ட்டரில் கொஞ்சம் பூச்சிக்கொல்லியை கலக்க துப்பில்லை.   அதனால் வெறும் குவார்டராக குடிக்கிறேன்.   ஊ.    தற்கொலைக் கவிதைகள்  'க்ளிஷே'  ஆகி விட்டன. தற்கொலையைப் பார்.   எவ்வளவு புத்தம் புதிதாய் ஜொலிக்கிறது!

விகடன் மேடையில்- திரு. பிரபஞ்சன்

போலீஸ் நம்மை வீட்டிற்கு அனுப்புகிறது

    நேற்று மாலை சுரேஷ்பேக்கரி வாசலில் நின்று நானும் இளங்கோவும் பேசிக்கொண்டிருந்தோம். இளங்கோ எப்போதும் ஒரு தத்துவவாதியை உடன் அழைத்துவருவது வழக்கம். இந்தமுறை யாரோ யக்ஞ வல்கியராம். சிறிது நேரத்திலெல்லாம் சாமும், ஜானும் வந்துவிட்டார்கள். “ ஏகாந்த..வேளை.. ” என்று பாடியபடி ஜானொடு ஜெயராமன். எல்லோரும் தென்காசிக்குப் போய் கலாப்ரியாவை கூட்டி வந்தோம். கொஞ்சம் கூட்டம் தான் கூடிவிட்டது. கலாப்ரியா அடிக்கடி யெயராமனை கட்டியணைத்து முத்திக்கொண்டிருந்தார். அது குறித்து எம்.கே.டி க்கு ஒரு வருத்தமும் இல்லை அவர் எப்போதும் போல் பூரித்த சிரிப்புடன் நின்று கொண்டிருந்தார். பணிரெண்டு பேர் கூடி மணிக்கணக்கில் குடித்துக்கொண்டிருக்கும் ஒரு குவளை தேநீர் மதுரம்....அதி மதுரம்  பக்கத்து பெட்டிக்கடையில் வியாபாரம் தூள் பறக்கிறது. சுகுமாரன் ஒரு பாக்கெட்டின் கடைசி சிகரெட்டை புகைத்துக்கொண்டிருக்கையில் கரகரத்த சத்தத்துடன் கடைகளின் ஷட்டர்கள் கீழிறக்கப்பட்டன. விளக்குகள் அணைக்கப்பட்டன. ஆணைகளைப் பிறப்பித்த படியே   ’ PATROL “   வண்டி     எங்களைக் கடந்து போனது

நினைவில் வீடுள்ள மனிதன்

நினைவில் வீடுள்ள மனிதன் மொரிஷியஸ் தீவிற்கு புறப்படுகிறான். கிளம்புகையில் தன் வீட்டை அடியோடு பெயர்த்துக் கொண்டு போய் கப்பலில் ஏற்றுகிறான் பாவம், அது தள்ளாடுகிறது சென்ற வாரம் அவன் ஒரு சினிமாவிற்குப் போனான். சொல்பேச்சு கேளாமல் அதிவேகத்தில் பைக்கோட்டித் திரியும் தன் இளையமகன் ஒரு லாரிச்சக்கரத்தில் சிக்கி உருச்சிதைந்து போவதை அவனதில் பார்த்தான். நினைவில் வீடுள்ள மனிதன் பூங்காக்களின் புதர்மறைவில் தன் மகளையே காண்கிறான் நினைவில் வீடுள்ள மனிதனுக்கு இருபத்தியேழாம் வாய்ப்பாடு மனப்பாடமாக தெரிந்திருக்கிறது நினைவில் வீடுள்ள மனிதனின் கேஸ் சிலிண்டர் தானாகவே திறந்து கொள்கிறது அவன் அலுவலகம் போனதும் அது “ டும்” என்று வெடிக்கிறது. நினைவில் வீடுள்ள மனிதனின் தலைக்கு மேலே ஒரு புகைப்போக்கி நீண்டிருக்கிறது அவனது நெஞ்சத்தில் ஏதோ ஒன்று எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. நினைவில் வீடுள்ள மனிதன் கடல் வழியே போய் கடல் வழியே திரும்பினானென்றாலும்   துளிநீலமும் கண்டானில்லை.        

ல்யூகோடெர்மா கன்னியின் விநாயகர்

அதிகாலை நீராட்டு முடிந்து ஈரத்தலை சொட்ட சொட்ட அவள் அந்த விநாயகரை வலம்வந்து கொண்டிருந்ததை பார்த்த மாத்திரத்தில் எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. பாவீ, இன்னும் உன் உலகில் ஒரு கடவுள் மிச்சமிருக்கிறாரா? அது இந்த ஆனைமுகன் தானா? அடீ, நிஜமாலும்தான் துதி சொல்கிறாயா ? தோப்புக்கரணம் வேறா? சொல்லடீ, அவன் விழிக்கடைநோக்கு அது தானா? அல்லது அதுவாக்கத்தான் இப்படி அலைபாய்கிறாயா ? இத்தெய்வம் தன் துதிக்கையில் ஏந்தியிருக்கும் கனிந்த பழம் நீ தானா ?                                        ல்யூகோடெர்மா – சருமத்தில் தோன்றும் வெண்புள்ளி குறைபாடு                                    நன்றி ; ஆனந்த விகடன் தீபாவளி சிறப்பிதழ்          

வெளிவர இருக்கும் எனது நான்காவது நூல்..

தி இந்து - (தமிழ்)

பைத்தியத்தின் டீ

ஒரு பைத்தியம் கேரிபேக்கில் டீ வாங்கிக் கொண்டு போவதைப் பார்த்தேன் பைத்தியத்திற்கு இன்னமும் டீ குடிக்க வேண்டியிருக்கிறது. இந்த இருபத்திநான்காம்தேதி இரவை நான் பைத்தியத்தின் டீ என்பேன். தெய்வமே ! இந்த டீ சூடாறாதிருக்கட்டும்.. சுவை குன்றாதிருக்கட்டும்.. பருகப்பருக பல்கிப்பெருகட்டும்..

ஏன் எழுதுகிறேன்

                          நன்றி : அந்திமழை –செப்டம்பர்- 2013             எழுதுவதற்கு என்று என்றென்றைக்குமான அடிப்படைக் காரணம் ஒன்றுண்டு . அது ஒருவனுக்கு இந்த உலகத்திற்கு சொல்ல ஒரு சேதி இருக்கிறது என்பது தான் . ஒரு சாமானியனுக்கு எந்த சேதியும் இல்லையா என்றால் , அவனுக்கும் சொல்ல ஒன்று உண்டு தான் ஆனால் அவனுக்கு சொல்லியே தீரவேண்டிய நெருக்கடியோ , பதைபதைப்போ இல்லை . நீட்டிப்படுத்தால் தூக்கம் வந்து விடுகிறது என்றால் எழுதுவதற்கு ஒரு அவசியமும் கிடையாது . மாறாக படுக்கையில் நாலாய் எட்டாய் சுருண்டு வளையும் பாம்பு எழுதியே தீரவேண்டி இருக்கிறது .    எது ஒருவனை படுத்தி எடுக்கிறது என்பது ஆளுக்கு தக்க மாறுபடும் அது ஒன்றாகவே இருக்க ஒரு கட்டாயமும் இல்லை .   லா . ச . ரா , தன்னை ஒரு செளந்தர்ய உபாசகன் என்கிறார் . இளவேனிலோ , “ சகோதரிகளே , உங்கள் ஸ்நான அறையை நன்றாகத் தாளிட்டுக் கொள்ளுங்கள் . வெளியே ஒரு செளந்தர்ய உபாசகன் காத்திருக்கிறான் “ என்று சொல்கிறார் . சொல்லத்தான் செய்வார் ….   தவிர எழுத்துக்காரனுக்கு இய