Skip to main content

Posts

Showing posts from June, 2013

அரூபவிரல்

              அப்போது என் முன்னே இரண்டு விரல்கள்  நீட்டப்பட்டன. ஒன்று கொலை மற்றொன்று தற்கொலை நான் இரண்டுக்கும் நடுவே நீண்டிருந்த அந்த அரூபவிரலைப் பற்றினேன். இந்த வரிகளை அந்த விரல்கொண்டே எழுதுகிறேன்.

கிறுக்கு

   மார்கழிப்பனியில் காதடைத்த பஞ்சோடு அதிகாலை ஐந்துமணிக்கெல்லாம் மைதானங்களில் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஃபிட்னஸ் கிறுக்கு பிடித்திருக்கிறது அதே சிற்ற ஞ் சிறுகாலையில் மதுவிடுதியின் கதவுகளை ஓங்கி ஓங்கி தட்டுகிறான் ஒருவன் அவனைத் தான் நாம் குடிக்கிறுக்கென்கிறோம் உருளைக்கிழங்கு போண்டாவை மணமுடித்து அதனூடே 72 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்ததொரு கிறுக்கு   சிங்கத்தின் வாயில் தலையைத் தந்துவிட்டு   கர்த்தரை நோக்கி கூவுகிறதொரு கிறுக்கு   பெண்கிறுக்கில் பலநூறு உட்கிறுக்குகள் சாரதி வைத்து தேரோட்டிய அதே தெருவில் இன்று நெஞ்சைப்பிடித்த படி பஸ்ஸிற்கு ஓடுகிறார் கல்யாணசுந்தரம் அவருக்கு கார்குழல் துவங்கி கால்நகம் முடியவும் கிறுக்கான கிறுக்கு இசைக்கிறுக்கில் வகைக்கொரு கிறுக்கு.. வாத்தியத்திற்கொரு கிறுக்கு.. கிறுக்குகள் தம் கிறுக்குத்தனத்தின் அச்சில் ஜம்மென்று அமர்ந்திருக்க அதிலொரு கிறுக்கு நேற்று உத்தரத்தில் தொற்றி விண்ணுலகு போனதேன்? போகும் முன் தன் ப்யானோவை நூறு சுக்காக்கியதேன்?

நிலவில் பழையபடி பாட்டி வடை சுடுகிறாள்

உன் காட்டுத்தீயின் சடசடப்பு   ஒய்ந்துவிட்டது இப்போதெல்லாம் உன்னை வாடை கடிப்பதில்லை நல்ல ஊண்.. பிறகெங்கு கைத்தொடி நெகிழ ? பால் கசப்பதில்லை படுக்கை நோவதில்லை உன் கண்களின் காந்தத்தை கழற்றி பழையிரும்புக்கடைக்குப் போட்டாய் கைகளைக் காட்டு... நகக்கொறி நின்றுவிட்டது உன்னை அந்த ஞாயிற்றுக்கிழமையிடம் சொல்லவா ?

புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு , ஆற்றுப்பாலம் , உக்கடம் வழியே இருகூருக்கு வந்துகொண்டிருக்கிறது

                      ( சாம்ராஜின் “ என்று தானே சொன் னார்கள் “ கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. )     -  இசை-     சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை. இக்கவிதைகளில் இசை முழங்கிக் கொட்டுவதில்லை. எனினும்   லயப்பிசகேதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் சாம்.     துண்டுதுண்டான வெவ்வேறு காட்சிகளை ஒரு நேர்கோட்டில் நிறுத்தி அதன் வழி கவிதையை உருக்கொள்ள வைப்பதென்பது இத்தொகுப்பின் மொழிதல்களில் பிரதானமானது. ஒரு கவிதையின் ஒவ்வொரு வரிகளின் மேலும் நாம் எண்ணற்ற கதைகளை புனைந்து கொள்ளலாம்.     பால் வாங்ககூட செருப்பு போட்டுக் கொண்டு போகும் “ திமிர்பிடித்த ’ பெண்,   சித்திரைத் தீயின் மதியத்தில் மேலும் தீயிட்டுக்கொள்ளும் பெண், எட்டு வயதில் முழங்காலுக்கு மேலான காயத்தை அப்பாவுக்கு கூட காட்ட ம ற