மனுஷ்யபுத்திரனின் “ தித்திக்காதே “ பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ நம் பெண்மை உடைக்கும் படை. மாயங்கள் புரிவதில் வல்லவனான இக் கள்வனின் கொஞ்சு மொழியும், கெஞ்சு மொழியுமன்றோ நம் பெண்மையை உடைக்கும் படை. ( திருக்குறள் –காமத்துப்பால் ) ” சிலைகளின் காலம் , இடமும் இருப்பும் ஆகிய இரண்டு புத்தகங்களுக்கு... ” என்பதாக என் நூல் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசைபட்டிருக்கிறேன். இன்னும் அந்த ஆசை நிறைவேறவில்லை.ஆனால் அது அடங்கி விடவும் இல்லை. மனுஷை சமீபத்தில்தான் சந்தித்தேன். இது உண்மை... ஆனால் இந்த உண்மையைச் சொன்னால் இது ஏதோ அபாண்டமான பொய் போல தொனிக்கிறது. அவரை எனக்கு சுமார் 16 வருடங்களாகத் தெரியும் என்று மொக்கையாக ஒரு கணக்கு சொல்லலாம். ஆனால் அதுவும் பொய் போன்றே தொனிக்கிறது. உண்மையில் நான் என் பிள்ளைப்பிராயத்தில் எப்போது முதன்முதலாக மனங்கசந்து தனித்தழுதேனோ அப்போதிருந்தே எனக்கு மனுஷைத் தெரியும். எந்தக்காதலி என்னை மட