Skip to main content

Posts

Showing posts from July, 2018

சொப்ன சஞ்சாரம்

                                                                            இணையம் கணினிக்குள் புகுந்து உலகை கோலோச்சியதற்கு முந்தைய பருவம் ... அவன் இளமை “ டும்” என்ற சத்தத்துடன் வெடித்துத் திறந்து சில வருடங்கள் ஆகியிருந்தன. காமத்தின் கடுவளிக்கு எதிர்நிற்க மாட்டாது தள்ளாடிக் கொண்டிருந்தான். அவன் தினவிற்கு கையளவிளல்ல, கவளங்களில் வேண்டியிருந்தது. ஆனாலும் அவன் பட்டினியால் வாடிக் கொண்டிருந்தான். அவனுக்குச் சொந்த வீடில்லை. நிரந்தர வேலையில்லை. எந்த வங்கியிலும் கணக்கில்லை. ஆனால் அவன் உடல் இதை எதையும் பொருட்படுத்தவில்லை.       எதிர்காலம் குறித்த பயங்கரமான கற்பனைகளிலிருந்து அவனைத் தடுத்தாட்கொண்டனர் சிலர். அவர்கள் முந்தானையைச் சரிய விடும் வேளையில் அவனுக்குக் கவலைகள் என்று இந்த உலகத்தில் ஒன்றுமே இருக்கவில்லை.ஏனெனில் இப்படி ஒரு உலகமே அக்கணங்களில் இருக்கவில்லை. பரவசத்தின் புதிர்நிரம்பிய பழங்காலக் கோட்டைக்குள் நுழைவதைப் போலே, அவன் அந்த போஸ்டர்களுக்குள் நுழைந்து பார்த்தான்.அதன் ஒரு மூலையில் A  என்கிற எழுத்து வட்டமிட்டுக் காட்டப் பட்டிருந்தது .கருப்பு நிறத்தால் ஜொலிக்க முடியும் என்பதையே அப்போ

அழும் அறைகளைச் சமைத்தல்

                                                                   என்னை  மாற்றிய எழுத்து  (ஒரு மணி   நேரம் முன்பு- சிறுகதை-  அ.முத்துலிங்கம்-  காலச்சுவடு ஜூன் - 2017 இதழ் ) இந்தக் கதையில் முத்துலிங்கம் கதைகளின் பிரதான அம்சமான பகடி மொழி ஒரு எழுத்தாகிலும், எழுத்தின் உறுப்பாகிலும் இல்லை.கத்தரித்து  வைக்கப்பட்ட, செய்யுள் போன்றதான சின்ன சின்ன வரிகளால் யாக்கப்பட்ட கதையிது. மானுட வாழ்வின் அரிய பக்கம் என்கிற பாராட்டிற்கு ஏங்காத எளிய கதை. கொடும் வறுமையால் பீடிக்கப்பட்டிருக்கும் ஒரு குடும்பம்..அந்தத் தாய் தன் மகனை புதிய பள்ளியொன்றில் சேர்க்க முயன்று தோற்றுத் திரும்பவது கதை.கதை என்று எதையாவது சொல்ல வேண்டும் என்கிற கட்டாயத்திற்காக நான் விடும் கதையிது.   இந்த ஆகச் சுமாரான கதைக்குள் அந்த மனிதர் செய்திருக்கிற ஜாலங்கள்தான் நண்பனின் அலுவலகப் படிக்கட்டில் அமர்ந்து கதையை  முழுக்க படிக்க   வைத்தது. பேருந்தில், வீதியில்,லாரிக ளுக்கிடையில் கதையுடனேயே பயணித்தேன். எவ்வளவு தான் தடுக்கித் தடுக்கி நடந்து போனாலும் அதற்குள் அந்த அலுவலகம் வந்துவிட்டது. வேறு வழியின