Skip to main content

Posts

Showing posts from April, 2024

தத்துவம்

"வ ந்தவர் என்றால்  சென்றிட வேண்டும்" என்பது ஒரு சிறிய, பெரிய, நடுத்தரமான  நல்ல தத்துவம். ஆகவே அதில் வருந்த ஒன்றுமில்லை. நானும் நீ வருவதற்கு முன்பிருந்த நானிற்கே  போய் விடுகிறேன் இந்த டேபிளை  பழைய இடத்திலேயே  மாற்றி வையேன்   என் கண்மணி ? சின்ன வேலைதானே... நான் கூட ஒரு கை பிடிக்கிறேன்

தொங்கும் பாடல்கள்

  பு லரிப் பொழுதில் காகங்கள்  அமர்ந்தமர்ந்து கரைந்த கரைதல்கள் யாவும் கீதம் என்றாகி இதோ... வந்து விட்டது சரக்கொன்றை!