ஹஸ்தினாபுரத்திலிருந்து சோமனூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கினேன். ஒரு கணம் ஒன்றுமே விளங்கவே இல்லை. காலம் திகைத்து முழித்தது. பிளாட்பாரத்தின் சிமெண்ட் பெஞ்சில் மல்லாந்து படுத்திருந்த குடிகாரன் சத்தமாக பாடிக்கொண்டிருந்தான். ஐஸ் வண்டிக்கு கை நீட்டிய அழுக்குக் குழந்தையை அவள் தாய் அடித்து இழுத்துப் போனாள். பக்கத்து பள்ளிவாசலில் இருந்து பாங்கு ஒலிக்கிறது. நான் என் தொடையைத் தட்டி " ஊசி முனையளவு இடம் கூட கிடையாது " என்று சொன்னேன் அப்போது என் மீது பூமாரி பொழிய போலீஸ்காரர் விசில் ஊதுகிறார்.