“உ ங்களுக்கு சினிமாவிற்குப் பாட்டெழுதும் விருப்பம் உள்ளதா?” இந்தக் கேள்வியை சில சமயங்களில் எதிர் கொண்டிருக்கிறேன். “ உள்ளது” என்பதுதான் பதில். முழு நேரப்பாடலாசிரியராக ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசையில்லை. ஆனால் என் சொல், ஒரு பியானோவோடு கூடி முயங்கும் இன்பத்தைக் காணும் ஆவல் உள்ளது. சொல்லொன்று பாட்டாக மாறித்துள்ளும் தருணத்தின் பரிதவிப்பை அள்ளிப் பருகும் வேட்கை உள்ளது. இதில் குற்றம் ஏதுமிருப்பதாக நான் எண்ணவில்லை. எவ்வளவு முரட்டுத்தனத்துடன் ‘இசை’ என்று எனக்கு நானே பெயர் சூட்டிக் கொண்டேனோ, அந்த முட்டாள் தனத்தின் சுகம் இன்னும் நெஞ்சு நிறைய இருந்து கொண்டுதான் இருக்கிறது. உங்களால் கவிதையையும் பாட்டையும் தெளிவாகக் காணமுடிமெனில் நீங்கள் இரண்டையும் குழப்பிக் கொள்ள அவசியமிருக்காது. மேல் கீழ் என்றல்ல, தனித்தனி என்றே நான் சினிமாப்பாடலையும் கவிதையையும் புரிந்து வைத்துள்ளேன் திரையிசைப் பாடல்கள் எங்கும் நிறைந்துள்ளன. அது குறித்து இங்கு நாள் தவறாது பேசப்படுகிறது.” பழைய பாடல்களா? புதிய பாடல்களா? “ என்று துவங்கிய ஒரு பட்டிமன்றம் அந்தப் புதிய பாடல்களெ...
“அ ன்பெனும் பெருவெளி” தமிழ் வாழ்வில் வள்ளலாரின் இடத்தை வகுத்துரைக்கும் ஒரு ஆவணப்படம். தமிழ் பக்தி மரபில் சீர்திருத்தவாதியாக அறியப்படுபவர் அவர். திருவருட்பாவின் ஆறாம் திருமுறையால் ஒரு கவிஞராக உருவெடுத்திருந்தாலும் அவர் பெரும்பாலும் அப்படி எண்ணப்படுவதில்லை. ஆனால் பாரதிக்கு முன்பாக தமிழின் குறிப்பிடத்தக்க ஒரு கவியாக அவர் இருந்துள்ளார். துறவியின் தோற்றத்தில் தோன்றினாலும் “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் “ , மேல்வருணம் தோல் வருணம் கண்டார் இலை”, “குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று” என்பது போன்ற , அவர் காலத்திற்கான ஆக்ரோஷமான வரிகளால் ஒரு புரட்சிக்காரர் போலவே அவர் நினைவு கூரப்பட்டு வருகிறார் இந்த ஆவணப்படத்தை வள்ளலார் குறித்ததென்றும் , இசை குறித்ததென்றும் இரண்டு விதமாகப் பகுக்கலாம். இரண்டும் தனித்தனியே அமையாமல் ஒன்றுள் ஒன்று அமர்ந்திருப்பதால் கலவையின்பத்தின் மகிழ்ச்சியொன்று நமக்கு வாய்க்கிறது. வள்ளலாரின் ஆறு பாடல்கள் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன. நமது பக்திப் பாடல்களுக்கென்று கைக்கொள்ளப்படும் ‘ காதலாகிக் ...