இரண்டு இருக்கைக்கும் பொதுவாக ஒரு கைக்கட்டை போதுமென்று யோசித்துச்சொன்னவன் எவனோ அவனே நமது மூத்தகுடி. நம் மணிக்கட்டுகள் மகிழ்ந்து குலாவி அவன் புகழ் பாடுகின்றன உன் இளஞ்சிவப்பு வரிக்குதிரை என்னவோ சொல்கிறது அதன் சத்தங்கள் என் நெஞ்சுக்குள் தாவி குளம்பொலிக்க ஓடுகின்றன. இவ்வளவு நேரமும் எங்கேயோ நடந்து கொண்டிருந்த எல்லா நிகழ்ச்சிகளும் முடிவடைந்து விட்டன. நன்றியுரையும் தீர்ந்துவிடும் பட்சத்தில் நாம் எழுந்து கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும், இந்த வாழ்க்கையை தூற்றி முணுமுணுக்காதே… கடவு ளின் கிருபையால் தானடி நாம் ஒரே வீட்டில் வசிக்கவில்லை. அவர் நமது ஏக்கத்தை ஆசிர்வதித்து காதலை காத்து நின்றார்.