நண்பர் செந்தில் தான் புதிதாக துவங்க இருக்கிற மின்னிதழுக்காக பொறுப்பான வேலையொன்றை தந்து செய்துதரச் சொன்னார் . அப்போது நான் பொறுப்பான வேலைகள் எதுவும் செய்யும் மனநிலையில் இல்லை . ஆனாலும் முதல் இதழ் என்பதால் செந்திலுடன் இருக்க விரும்பினேன் . ஆகவே “ பொறுப்பற்ற வேலையொன்றை “ செய்து தருவதாக ஒப்புக்கொண்டேன் . அதுவே குத்துப்பாடல்கள் பற்றிய இக்கட்டுரை . அவற்றுடன் இடையறாத புழக்கத்தில் இருப்பவன் என்பதால் சொந்த மண்ணில் சதமடித்துவிட்டு ஸ்டைலாக மட்டையைத் தூக்கிக் காட்டிக்கொள்ளலாம் என்பது என் தந்திரமாக இருந்தது . ஆனால் “ தகதக தகதக வென ஆடவா … “ , “ சித்தாடை கட்டிக்கிட்டு …” எனத்துவங்கி “ வா மச்சா .. வா வண்ணாரப்பேட்டை …” , “ பல்ல இளிக்கிறவ .. தொல்ல கொடுக்குறவ ..” என சுற்றித்திரிந்து “ டாங்காமாரி ஊதாரி ” வழியே வெளியே வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது . என்னதான் பொறுப்பற்ற வேலையாக இருந்தால