ஒரு கழிவிரக்க கவிதை கண்ணை கசிக்கிக் கொண்டு என் முன்னே வந்து நிற்கிறது அதன் மேனியெங்கும் கந்தலின் துர்நாற்றம் ஊசிப்போன வடையை தின்றுவாழும் அதை கண்டாலே எரிச்சலெனக்கு. “ போய்த்தொலை சனியனே.. கண்ணெதிரே இருக்காதே..” கடுஞ்சொல்லால் விரட்டினேன். காலைத் தூக்கிக் கொண்டு உதைக்கப் போனேன். அது தெருமுக்கில் நின்றுகொண்டு ஒருமுறை திரும்பிப் பார்த்தது நான் ஓடோடிப் போய் கட்டிக்கொண்டேன்.