ஒப்பிலாமணிப் புலவரின் இரண்டு பாடல்கள் [ காதல் நோய் வருத்தி இரவு நீள, இரவி தோன்றி விடியாததை எண்ணிச் சினந்து தலைவி தோழிக்கு உரைத்தது..] 1. ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ ? யான் வளர்த்த கோழி வாய் மண்கூறு கொண்டதோ- ஊழி திரண்டதோ கங்குல் தினகரனும் தேரும் உருண்டதோ பாதாளத்துள். [ தேர்- சூரியத்தேர்] [ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ- கடல் போல் கொந்தளிக்கிற இரவாம்] 2. அரவங் கரந்ததோ! அச்சுமரம் இற்றுப் புரவி கயிறுருவிப் போச்சோ! இரவி தான் செத்தானோ இல்லையோ! தீவினையோ! பாங்கி எனக்கு எத்தால் விடியும் இரா.