ஒப்பிலாமணிப் புலவரின் இரண்டு பாடல்கள்
[ காதல் நோய் வருத்தி இரவு நீள, இரவி தோன்றி விடியாததை எண்ணிச் சினந்து தலைவி தோழிக்கு உரைத்தது..]
1.
ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ ? யான் வளர்த்த
கோழி வாய் மண்கூறு கொண்டதோ- ஊழி
திரண்டதோ கங்குல் தினகரனும் தேரும்
உருண்டதோ பாதாளத்துள்.
[ தேர்- சூரியத்தேர்] [ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ- கடல் போல் கொந்தளிக்கிற இரவாம்]
2.
அரவங் கரந்ததோ! அச்சுமரம் இற்றுப்
புரவி கயிறுருவிப் போச்சோ! இரவி தான்
செத்தானோ இல்லையோ! தீவினையோ! பாங்கி எனக்கு
எத்தால் விடியும் இரா.
[ காதல் நோய் வருத்தி இரவு நீள, இரவி தோன்றி விடியாததை எண்ணிச் சினந்து தலைவி தோழிக்கு உரைத்தது..]
1.
ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ ? யான் வளர்த்த
கோழி வாய் மண்கூறு கொண்டதோ- ஊழி
திரண்டதோ கங்குல் தினகரனும் தேரும்
உருண்டதோ பாதாளத்துள்.
[ தேர்- சூரியத்தேர்] [ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ- கடல் போல் கொந்தளிக்கிற இரவாம்]
2.
அரவங் கரந்ததோ! அச்சுமரம் இற்றுப்
புரவி கயிறுருவிப் போச்சோ! இரவி தான்
செத்தானோ இல்லையோ! தீவினையோ! பாங்கி எனக்கு
எத்தால் விடியும் இரா.
Comments