Skip to main content

ஒளி வளையத்துள் ஒரு தூசு


முதுகெலும்பு வெளிக்கிளம்ப 

தவமியற்றல் அவசியமில்லை.

ஞானமடைய 

எளிய வழிகள் நிறைய உண்டு

அதிலொன்று ICU வில் கிடத்தல்

அதுவும் அம்மணமாய்க் கிடத்தல்


'நிர்வாணம் அடைதல் ' என்பதை

ஆகச்சிக்கலான தத்துவம்

எனக்கருதி

பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன்.


உடலில் ஒன்றுமில்லாதபோது

எதிலும் ஒன்றுமில்லை

என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது


கண்களில் பீளைகட்டியிருக்கும் போது

நன்றாகவே தெரிந்தது

என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம்

கண்ணில் பீளை என்பதால்

உதித்த வளையம்


என்னால் இப்போது

சித்தார்தனுடன்  அமர்ந்து 

ஓரளவு

உரையாட முடியும்


ஆயினும்

ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய்

'ஹேமா' என்கிற ஒரு  பெயர்


நண்பர்காள்..

முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே

இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும்.


இது ஒரு ஞானம்

அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில்

இது ஒரு உண்மை


Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சின்னஞ் சிறியனவே! பென்னம் பெரியனவே!

கபிலர் கவித்துவத் திரட்டின் அடுத்த கட்டுரை இன்றைய அகழ் இதழில் வெளியாகியுள்ளது  மூவாயிரம் ஆண்டுகள் கழித்து இந்தக் கதையின், இதே பாத்திரங்கள், அப்படியே பாத்திரம் மாறாது நமது சினிமாவில் தோன்றினர். “ என்கிட்ட ரெண்டு பொண்ணு இருக்கு… பிடிச்சா கட்டிக்குங்க…” என்று ஒரு தமிழறிஞர் தமாசு செய்தார். கபிலர் என்கிற புலவர்க்குப் பதில் இப்போது பட்டிமன்ற நடுவர். பலரும் ஏற்க மறுக்கும் கட்டங்கரிய பெண்களாக பாரி மகளிர். இவ்வளவும் தற்செயலா? கச்சிதமா? ஒரு இயக்குநரின் தனி மூளையில் உதித்த காட்சியாக இது எனக்குத் தெரியவில்லை. நமது ‘ பெரியோர்கள் பலரும் சேர்ந்து நடத்திய நாடகம் ‘ என்றே எண்ணத் தோன்றுகிறது... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு  கீழே உள்ளது. https://akazhonline.com/?p=12062