இந்த மங்கியமாலையில் அவன் சரக்கேக்கம் தலைவிரித்தாடுகிறது . நகரமோ கடுத்த காவலில் இருக்கிறது . மனமோ தொட்டு தொட்டு நச்சரிக்கிறது . ஒரு கார் வாங்கி ஓட்ட ஒரு ஆள் வாங்கி அப்படி “ ஜம்மென்று ” போக அவனுக்கு வாய்க்கவில்லை . ஆகவே அவன் அன்றைய தினத்தின் அரசியல் , பொருளாதார , பூகோளக் காரணிகளை ஆராயத் துவங்கினான் . எல்லா காரணிகளும் “ போனால் செத்தாய் ..” என்றே எச்சரிக்க கடைசியில் அவன் கண்டறிந்தான் ஓர் உபாயம் அது.. மேஜிக்கல் ரியலிசத்தை வணங்கிவேண்டி ஒரு பெருச்சாளியாகி விடுவது .