1. காவியம் இந்த அதிகாலை எப்படி மின்னியது தெரியுமா? சொறி முற்றிய நாயொன்றின் பின்னங்கால்களில் லாரி ஏறிவிட்டது. அதன் வீறிடல் எல்லோர் மனங்களிலும் அதிர, கல்லூரி மாணவி ஒருத்தி எஞ்சிய காலிரண்டைப் பற்றி அலேக்காக தூக்கி ஓரத்தில் கிடத்தி விட்டாள். " குழந்தையிலிருந்தே அவள் வீட்டில் நாய்கள் உண்டு" காவியத்திலிருந்து அவளை விலக்கி வைத்தார் நண்பர் “ நாயென்றாலே நான்கு தெருக்கள் தள்ளி நடப்பவள் “ என்று நானவளை காவியத்துள் அமுக்கிப் போட்டேன். 2. பிறகு கடவுளே! நீர் முதலில் மனைவிகளின் கன்னங்களிலிருந்து வழுவழுப்பைச் சுரண்டி விடுகிறீர் பிறகு கணவர்களை கூண்டிலேற்றி முதுகுத் தோலை உரித்தெடுக்கிறீர் கடவுளே! நீர் முதலில் கணவர்களின் சொற்களிலிருந்து நறுமணத்தை விரட்டியடிக்கிறீர் பிறகு சத்தியம் செய்யச் சொல்லி மனைவியரைத் துன்புறுத்துகிறீர் 3. ஸ்