எவன் குவளை நீரை தட்டிவிட்டேன் எவன் குடிசைக்கு தீ வைத்தேன் எந்த தெய்வத்தை நிந்தித்தேன் எந்த பத்தினியின் விரதத்தை கலைத்தேன் எந்த சொல்லால் எவன் நெஞ்சை சிதைத்தேன் எந்த சிறுமியை வல்லாங்கு செய்தேன் எந்த குருடனுக்கு புதைகுழிக்கு வழிசொன்னேன் எந்த சூலியின் நிறைவயிற்றைக் கிழித்தேன் எந்த தூளிக்குள் அனலள்ளிப் போட்டேன் எந்த நண்பனின் புறங்கழுத்தைக் கடித்தேன் எவன் தொடைசதைக்கு நன்றி மறந்தேன் எப்பிறப்பில் எவன் குடியறுத்ததற்கு இப்பிறப்பு.