1) மான்கள்
மிரண்டது போல்
ஒரு பார்வை பார்க்கும்
அதற்கு நீ மிரண்டு விட்டால்
புரண்டு விட்டாய் போ!
2) மொட்டைக் கருவேலத்தின் சொப்பனத்தில்
எப்போதும்
ஒரு காயாத கானகம்.
அதில் ஏராளம் மான்கள்.
3) பொழுது விடிந்தது.
பொற்கோழி கூவிற்று.
அம்மா வந்து அறைக்கதவை இடிக்கிறாள்.
ஜன்னல் கம்பிகளூடே
ஓடி மறைகின்றன
சில மாயமான்கள்.
4 ) சாயாத கொம்பிரண்டும்
முட்டிமுட்டி கொன்றிட்டால்
களிமோட்சம் உனக்குத்தான் சா !
5 ) சொல் “ மகாலிங்கம் “ !
எத்தனை மான்தான்
வேண்டும் உனக்கு.
மிரண்டது போல்
ஒரு பார்வை பார்க்கும்
அதற்கு நீ மிரண்டு விட்டால்
புரண்டு விட்டாய் போ!
2) மொட்டைக் கருவேலத்தின் சொப்பனத்தில்
எப்போதும்
ஒரு காயாத கானகம்.
அதில் ஏராளம் மான்கள்.
3) பொழுது விடிந்தது.
பொற்கோழி கூவிற்று.
அம்மா வந்து அறைக்கதவை இடிக்கிறாள்.
ஜன்னல் கம்பிகளூடே
ஓடி மறைகின்றன
சில மாயமான்கள்.
4 ) சாயாத கொம்பிரண்டும்
முட்டிமுட்டி கொன்றிட்டால்
களிமோட்சம் உனக்குத்தான் சா !
5 ) சொல் “ மகாலிங்கம் “ !
எத்தனை மான்தான்
வேண்டும் உனக்கு.
Comments