Skip to main content

Posts

Showing posts from September, 2009
விசில் ஒலிக்கும் சமோசா பொறிஞர் ஆனந்துக்கு இன்றைய தேநீர் இடைவேளையின் போது ஒரு சமோசா சாப்பிடவேண்டும் என்று தோன்றியது. தாளித்த வெங்காயத்தின் பொரித்த வாடைக்கு நாசி கிரங்கியது. கண்களை மூடி ஒரு முறை முகர்ந்ததில் அவர் தன் 22 வருடங்களை உள்ளிளுத்துக் கொண்டார். முக்கோண வடிவ சமோசா நீள் சதுர வெண் திரையானது. பொறிஞர், இப்போது லட்சுமி டாக்கீஸின் மணல் குட்டின் மேல் அமர்ந்திருக்கும் சிறு பொடியன். தங்க மீனை எடுப்பதற்காக தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிறார் கமலஹாசன். நினைத்ததை முடித்தாக வேண்டும் தலைவர். மூதாட்டிகள் கடவுளைப் பிரார்த்திக்கிறார்கள். ஊஞ்சலைப் போல ஆடிக்கொண்டிருக்கிறது கயிறு. சற்றைக் கெல்லாம் சடசடவென எழுந்த கரவொலிகளுக்கிடையே அரங்கைக் கிழிக்கிறது ஆனந்தின் விசில் சத்தம்.
எழுத வந்த கதை எழுத வந்த கதையை எழுதும் படி தமிழ் கேட்டிருந்தார். இப்படி எழுதும் அளவுக்கு நான் வலையில் பெரிதாக எதையும் எழுதவில்லை. எழுத வந்த கதை, கடந்து வந்த காட்டாறு என்றெல்லாம் உண்மையில் என்னிடம் எதுவும் இல்லை.தழிழ் எழுதி இருப்பது போல வலையில் எழுத வந்ததற்க்கான வலுவான காரணம் எதுவும் என்னிடம் இல்லை.அதனால் உண்மை எதுவென்று யோசித்து எழுத முயன்றிருக்கிறேன். முதல் சந்திப்பிலேயே உங்கள் கவிதைகள் சிலதை மனப்பாடமாக சொல்லி உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வாசகன் ஒருவன் உங்களுக்கு கிடைத்திருக்கிறானா? உங்கள் பெயர் சபைகளில் உச்சரிக்கப்படும் போது தன்னையும் சுற்றத்தையும் மறந்து கைதட்டிக் குதூகலித்து, சிறு பிள்ளை கோலம் கொள்ளும் நண்பன் ஒருவன் உங்களுக்கு இருக்கிறானா? எனக்கு அப்படி ஒருவன் உண்டு. அவன் நரன். அவன் தான் சில மாதங்களுக்கு முன் “உன் கவிதைகளை ப்ளாக் கில் போடலாமா” என்று கேட்டான். நான் “அப்படீனா என்ன” என்று கேட்டேன், பொதுவாக நவீன உலகின் மூளைச்சாவரியில் கலந்து கொள்ளாமல் ஓரமாக ஒதுங்கி நடப்பதே என் சுபாவம். அறிவியல் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற புதிய வாய்ப்புகளை அவசர அவசரமாக கற்றுத்தேர்வதில் எனக்கு

poem

கண் கொள்ளா காட்சி கண் கொள்ளா காட்சி என கத்தி ஒன்றைக் கண்டேன். அதன் தகதகப்பில் மனமழிந்து பித்தானேன். நெஞ்சைக் கீறி ரத்தமீந்தேன் அதன் கூர் நுனிக்கு. முதல்கலவியென வருடி வருடித் திளைத்தேன். ஏற்கனவே வெட்டுண்ட ஒரு கோடி தலைகளுள் ஒன்றாகும் மோகத்தால் கொல்! கொல் ! என்று மண்டியிட்டு கதறுகிறேன்.

கவிதை

குத்துப் பாட்டின் அனுபூதிநிலை இந்த வீட்டின் ஜன்னல்களை மூடினேன். கதவுகளைச் சாத்தினேன் மறவாமல் இவ்வுலகை வெளியே தள்ளி தாழிட்டேன் இசை துவங்கியது பேழையிலிருந்து வெளிப்பட்ட குரலுருவும் நானும் கைகோர்த்து ஆடத் துவங்கினோம். ஆட்டம் ... குதியாட்டம் ... பேயாட்டம் .... மொழ மொழன்னு யம்மா யம்மா ... மொழ மொழன்னு யம்மா யம்மா ... தலை வழி பீறிட்டு விண்முட்டி அடிக்குதொரு நீரூற்று தடதடன்னு நடக்குறா மடமடன்னு சிரிக்குறா வெட வெடன்னு இருக்குறா கொட கொடன்னு கொடையிறா மொழ மொழன்னு யம்மா யம்மா ... மொழ மொழன்னு யம்மா யம்மா ... ஆயிரம் கரங்கள் கூடி ஆனந்த கொட்டடிக்க அதிரும் நானொரு களி கொண்ட பேரிகை பஞ்சுமிட்டாய் இடுப்பழகி ஓலக்கொட்டாய் உடுப்பழகி ப்பெப்பர் முட்டாய் பல்லழகி க்கொட்டப் பாக்கு கண்ணழகி ராங்கீ ... மனச வாங்கீ... எனதுடலா இது எனதுடலா இப்படி பூரிப்பில் துடிதுடிக்கும் இது என்ன எனதுடலா ? எனதுடலா? எனதுளமா இது எனதுளமா ஈனக்கவலைகள் எரியும் நெருப்பில் ஜொலிப்பது என்ன எனதுளமா ? எனதுளமா? (ராங்கி அனுராதா ஸ்ரீராமுக்கு ..)