Skip to main content

இசை கவிதைகள் - அகழ்





ல்லதங்கா



கழிவறைக் கதவை
இழுத்துச் சாத்திக் கொள்வது
வசதியானது


தண்ணீர் குழாயை
திறந்து விடுவது
மேலும்
வசதியானது


ஆனால்
வெட்ட வெளியின் மத்தியில்
அமர்ந்திருக்கிறாள் ஒருத்தி


பெண்களின் கண்ணீர் என்பது
ஒரு தனியூத்து


இங்கு நான் காண்பது
அதன் சில துளிகள்


ஒருத்தி அழத்துவங்கியவுடன்
அபலை ஆகிவிடுகிறாள்


அங்கு அப்போதே
முளைத்து விடுகிறது ஒரு கிணறு


“ தொப்” சத்தமே
அப்பாலே போ!


காதலரே… காய்பவரே…


முறுக்கிப் பிழியப்பட்டு
பலகாரக் கடையில் அடுக்கப்பட்டுள்ள
ஜிலேபித் துண்டு போல் ஆகிவிட்டேன் திடீரென்று


யாரும் எடுத்து
விண்டு விழுங்கலாம்


எந்தத் தொண்டையிலும்
நழுவி விழுவேன்
குளு குளுவென


ம்…
சீக்கிரம்…


இந்தச் சலுகை
எத்தனை மணித்துளிகளுக்கென்று
எனக்கே தெரியாது


ஆகட்டும்..


சீக்கிரம்..

சீக்கிரம்…


ணி செய்து கிடத்தல்


துப்புரவுப் பணியாளர்கள்
பணி முடித்து
ஓய்வில் இருக்கிறார்கள்


ஒருவர்
கடைவாய் ஒழுக
வெற்றிலை
மென்று கொண்டிருக்கிறார்


ஒருவர்
போனில்
சத்தமாகச் சிரித்த படியிருக்கிறார்


அணைத்துக் கொள்வதற்குப் பதிலாக
ஒருவரையொருவர்
துரத்தி விளையாடுகிறார்கள்

இளம் பெண்கள்


இதை ஓய்வென்று நம்பவில்லை நான்


இப்போது
உலகின் ஏதோ ஒரு மூலை
துப்புரவாகிக் கொண்டிருக்கிறது


எங்கென்றுதான்
எனக்குச் சொல்லத் தெரியவில்லை.



Comments

வண்ணைசிவா said…
அருமையான கவிதைகள்.

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான