Skip to main content

போலீஸ் நம்மை வீட்டிற்கு அனுப்புகிறது


   


நேற்று மாலை
சுரேஷ்பேக்கரி வாசலில் நின்று
நானும் இளங்கோவும் பேசிக்கொண்டிருந்தோம்.
இளங்கோ எப்போதும் ஒரு தத்துவவாதியை
உடன் அழைத்துவருவது வழக்கம்.
இந்தமுறை யாரோ யக்ஞ வல்கியராம்.

சிறிது நேரத்திலெல்லாம்
சாமும், ஜானும் வந்துவிட்டார்கள்.
“ ஏகாந்த..வேளை..என்று பாடியபடி
ஜானொடு ஜெயராமன்.

எல்லோரும் தென்காசிக்குப் போய்
கலாப்ரியாவை கூட்டி வந்தோம்.
கொஞ்சம் கூட்டம் தான் கூடிவிட்டது.
கலாப்ரியா அடிக்கடி யெயராமனை
கட்டியணைத்து முத்திக்கொண்டிருந்தார்.
அது குறித்து எம்.கே.டி க்கு ஒரு வருத்தமும் இல்லை
அவர் எப்போதும் போல் பூரித்த சிரிப்புடன் நின்று கொண்டிருந்தார்.

பணிரெண்டு பேர் கூடி
மணிக்கணக்கில் குடித்துக்கொண்டிருக்கும்
ஒரு குவளை தேநீர்
மதுரம்....அதி மதுரம் 


பக்கத்து பெட்டிக்கடையில் வியாபாரம் தூள் பறக்கிறது.
சுகுமாரன் ஒரு பாக்கெட்டின் கடைசி சிகரெட்டை
புகைத்துக்கொண்டிருக்கையில்
கரகரத்த சத்தத்துடன் கடைகளின் ஷட்டர்கள் கீழிறக்கப்பட்டன.
விளக்குகள் அணைக்கப்பட்டன.
ஆணைகளைப் பிறப்பித்த படியே 
PATROL “  வண்டி   எங்களைக் கடந்து போனது.
இடை நின்ற பேச்சு தொடர்ந்து வளர்ந்தது.
தொ.ப  “ குடிசாமிகளுக்கு தரப்படுகிற இரத்தப் பலி “
குறித்து சொல்லிக்கொண்டிருக்க
போன வண்டி திரும்பி வந்ததை யார் கண்டார் ?
“ டேய்.. “ என்கிற சத்ததிற்கு
 கூட்டம் திசைக்கொன்றாய் சிதறி விட்டது.
 எம்.கே.டி தன் பட்டுஜரிகை வேட்டியை
 தூக்கிக்கட்டிக்கொண்டு ஒரு மூத்திரச் சந்திற்குள் ஓட
 நமது யக்ஞவல்கியர் பெட்டிக்கடை மறைப்பில் ஒளிந்து கொண்டார்.
ஏண்டா .. உங்களுக்கெல்லாம் வீடே கிடையாதா ..
 என்று கேட்கிறது போலீஸ்
 ஐயா , நிஜமாகவே எங்களுக்கென்று ஒரு வீடில்லை.
 வீடு எங்களை போலீஸில் பிடித்து தர
 போலீஸ் எங்களை வீட்டிற்கு பிடித்துக் கொடுக்கிறது.



                                           
                                                                                                                                                                                                    (  ஜானுக்கு ...)


                                                      
                       நன்றி : தி இந்து தீபாவளி மலர்

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம