பெருந்திணைக்கு தூதுமுண்டு..
தூது சென்ற நிலவு
கெடு செய்தி கொண்டு திரும்பியது.
சாஸ்திரத்தின் இரும்புக் கதவு அடித்துச் சாத்தியதில்
அதற்கு ஆறாத நெற்றிக்காயம்
.
பெருந்திணைக்கும் நினைவுகளுண்டு.
அவற்றைத் தூக்கி அட்டாலியில் எறிந்து விடமுடியாது
பெருந்திணைக்காரன் அழுகிறான்
அதில் அசலான கண்ணீரின்
அதே அளவு உப்பு.
துஞ்சா மட நெஞ்சை துயில் அமர்த்த
பாடத் துவங்குகிறான்..
" இவ் அளவு இட்டதே பெரும்பிச்சை.. "
என்று தளும்புகிறதப்பாடல்.
Comments