Skip to main content

இன்று ஒரு தகவல் !

                                                

பிள்ளைப் பிராயத்தில்
எப்போதாவது குளிப்பேன்
அடித்தால் பல் துலக்குவேன்
அறிவு வளர்ந்த பிறகு
தவறாது குளித்தேன்
தினசரி பல்துலக்கினேன்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்றான் ஒருவன்.
நான் அதை நம்பினேன்.
இன்னொருவன் வந்தான்...
பல்லிடுக்கு, நுண்கிருமி என்றெல்லாம்
பயங்கரக் கதைகள் சொன்னான்.
உடனடியாக நெளிந்து வளைந்த புருசுக்கு மாறினேன்.
பிறகொருவன்  சொன்னான்..
ஒரு துலக்கால் பண்ணிரண்டு மணி நேரத்தைத் தான் பாதுகாக்க இயலும்..
பல் போனால் சொல் போச்சு...
நான் அன்றிரவே
இதுவரை தவற விட்ட எல்லா இரவுக்குமாய் சேர்த்துத் துலக்கினேன்.
என்னிடம் உள்ள ஒரே நல்லொழுக்கம் புகையாமை மட்டுந்தான்
நேற்றொருவன் எச்சரிக்கிறான்...
“ நீ ஒரு முறை பல் துலக்குவது ஆறு சிகரெட் புகைப்பதற்குச்  சமம்..
 பல்முளைத்த காலந்தொட்டு
 நான் துலக்கோதுலக்கென்று துலக்கி வரும் பற்பசையில்
 நிக்கோடின் கலந்துள்ளதாம்.
 நாளையிலிருந்து
 நாள் ஒரு தகவலாக அழித்துக் கொள்ள இருக்கிறேன்.

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...