அதலபாதாளம் உறுமிக் கொண்டிருக்கிறது. சொல்லைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறேன் .... பழுக்கக் காய்ச்சிய சொல்லை எடுத்து நெஞ்சில் ஒரு இழு இழுத்தேன் ..... கூவி வருகிறதொரு சொல் அதனெதிரே ஆடாது அசையாது உறுதி காத்து நிற்பேன். பிறகு துண்டு துண்டாவேன். .... கடைசிச் சருகும் காற்றில் பறந்த பிறகு சொல்லைச் சொல்லில் கலந்து குடி .... நஞ்சு திரண்டுவிட்டது. சொல்லே நீலகண்டன்.