Skip to main content

அதனாலென்ன...




அதனாலென்ன?

விகடன் பொங்கல் சிறப்பிதழில் எனது கவிதைகள் வந்திருக்கின்றன.
அழகான வடிவமைப்புடன் இடம் பெற்றிருக்கிற அக்கவிதைகளில்
இரண்டு இடங்களில் விகடன் கத்தரி வைத்திருக்கிறது. ( வெறும் இரண்டே எழுத்தை தான் நீக்கியிருக்கிறார்கள் என்ற போதும் மனம் வேதனை கொள்ளவே செய்தது). “அதனாலென்னா? “ என்று ஒரு கவிதைக்கு புதிதாக ஒரு தலைப்பு வைத்திருக்கிறார்கள். நம்பர் 1 வார இதழில் உன் கவிதை வரும் என்றால் ‘அதனாலென்ன’ டா இசை!.....
நண்பர் சுகுணா திவாகருக்கு என் நன்றியும், விகடனுக்கு என் நன்றியும், வருத்தமும்.
எடிட் செய்யப்படாத எனது கவிதைகள் கீழே...


````````````````````````````````````````````````````


ஓயாத திகில்




என் உடல் ஆம்புலன்ஸ்
தலை சைரன் பல்ப்
மனம் இடுது நாசஊளை.


`````````````````````````````````````````````````


999 வாழ்க்கை


இரட்டை வாழ்க்கை வாழ்கிறாய்
எனக் கடிந்து கொள்கிறாயே
நானென்ன அவ்வளவு நீதிமானா?
அடி தோழி! நான் 999 வாழ்க்கை வாழ்கிறேன்.


`````````````````````````````````````````````````````````````````````````````


உன்னை அடைவது ...


உன்னை முத்தமிட வேண்டியே
உன் இதழ்களை முத்தமிடத் தவிக்கிறேன்.
உன் இதழ்களை முத்தமிடுவது
உன்னை முத்தமிடுவதாகுமா
எனத் தெரியவில்லை.
உன்னை அடைவதற்கென்றே
உன் உடலை அடைந்திடத் தவிக்கிறேன்.
உன் உடலை அடைவது
உன்னை அடைவதாகுமா
எனத் தெரியவில்லை.


`````````````````````````````````````````````````````````````````````````


ஒரு ஒழியாத சப்தம்


பேசிக்கொண்டிருக்க பேசிக்கொண்டிருக்க
ஒரு காதல்
தன்னை பட்டென துண்டித்துக்கொண்டது.
அப்போது அவன் காதில்
“ங்கொர்” என்ற ஒரு சத்தம் கேட்டது.
அது முதலாய் அவன் ஆயுள்தீரும் வரை
அச்சத்தம் ஒழியவேயில்லை.
காது, மூக்கு, தொண்டை நிபுணர்களால்
அதை சரி செய்ய கூடவில்லை.


````````````````````````````````````````````````````````````````````````````````````


ஒரு பறவையை வழிஅனுப்புதல்


ஒரு பறவை கூட்டை விட்டு
வெளியேறும் விருப்பதைத் தெரிவிக்கையில்
நீங்கள் அதற்கு தகுந்த காலநிலையை
தெரிவு செய்து கொடுக்க வேண்டும்.
அதன் சிறகுகளை ஒரு முறை
சோதித்துக் கொள்வது நல்லது.
தேவை எனில்
அதன் வலிமையை கூட்டும் வழிகளையும் கற்பிக்கலாம்.
அடிக்கடி அதை தடவிக்கொடுப்பதை
கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ள வேண்டும்.அதன் கண்களை தவிர்த்து விட வேண்டும்.
வேடனின் தந்திரங்கள் மற்றும் அம்புகளின் கூர்மை பற்றி
கனிவோடு எச்சரிக்க வேண்டும்.
போகும் வழியில் அதற்கு பசிக்குமென்பதும்
உங்களுக்கு தான் நினைவிருக்க வேண்டும்
வழக்கம் போல் தங்கள் அலகால் புகட்டாமல்
ஒரு தட்டில் வைத்து நீட்ட வேண்டும்.
பிறகு வானத்தைப் பார்க்கும் சாக்கில்
அண்ணாந்து பார்க்காதிருக்க வேண்டும்.


``````````````````````````````````````````````````````````````````````````````


நீ உன் முத்தத்தை உதட்டிற்கு கொண்டு வா


ரயில் வந்து விட்டது.
அதற்கு ஒன்றும் தெரியாது.
அது
வரும் போகும்.


``````````````````````````````````````````````````````````````````````


நீயொரு இளமஞ்சள்

உனதிடையில் ததும்புகிற
இளமஞ்சள் நதி
என் கனவேறி வந்தது.
இது ஒரு இளமஞ்சள் கனா.
இது ஒரு இளமஞ்சள் இரவு.
இள மஞ்சள் வெள்ளதில்
மிதக்கிறது இவ்வறை.


```````````````````````````````````````````````````````````````````````````


மகா ரப்பர்


பிழையாக எழுதப்பட்ட
ஒரு வரியை
அழித்துக்கொண்டிருக்கிறான் சிறுவன்.
அதை அருகிலிருந்து பார்த்தபடியிருந்தவன்
தம்பி, இது போல்
2.3.2002 ஐ அழிக்கமுடியுமா
என்று கேட்டான்.
இது இங்க் ரப்பர்னா
எல்லாத்தையும் அழிக்கும்
என்றான் சிறுவன்.


`````````````````````````````````````````````````````````````````````


Comments

அருமை .இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
selventhiran said…
ப்ரிய சகா, கவிதைகள் கண்டேன். மகிழ்ந்தேன்.

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம