Skip to main content

Posts

Showing posts from July, 2012

கடுவளிக்காலம்

                                                                                    நான் இப்போது                                             குடித்தே ஆக வேண்டும்                                             என்னிடம் நாலு பேரல்                                             சாராயம் இருக்கிறது                                             என் ஊறுகாய் மட்டை                                             திருவனந்தபுரத்திலிருக்கிறது.

கணேசகுமாரன் கவிதை

  சாகும்வரை சிரிப்பவன் அவன் ஆரம்பகால நாடகங்களில் கதாநாயகனாக நடித்தவன்தான் கைதட்டி ரசித்த மக்கள் உச்சந்தலையில் முத்தமிட்டு வாழ்த்தினார்கள் கலைஞன் வீடு முழுவதும் விருதுகள் குவித்தான் மேலும் சில நாடகங்களில் வில்லனாக அவனே விரும்பி நடித்தான் உணர்ச்சிவசப்பட்ட மக்கள் சபித்தபடி விருதுகளையும் பரிசுகளையும் அவன் கையில் திணித்தனர் ஒரு நாளில் நிர்பந்திக்கப்பட்டான் கோமாளியாக நடிக்கும்படி சிரிப்பாய் சிரித்தது வாழ்க்கை அவ்வளவு பெரிதாக அவ்வளவு வலியாக அவ்வளவு கொடூரமாக எல்லோர் துயரங்களையும் விரட்டியபடி சிரித்துக் கொண்டிருந்தது மேலும் மேலும் அவனாலும் ஒரு கட்டத்தில் சிரிப்பை அடக்க முடியவில்லை சிரித்து சிரித்துக் கண்ணீர் பெருகி ஆறாக ஓடி மேடையும் மக்களும் மிதக்கத் தொடங்கியபின்னும் நிறுத்துவதாயில்லை அவன் அத்தனை அச்சாகப் பொருந்திவிட்டது கோமாளித் தொப்பி பழைய கிரீடங்களைத் துறந்து ஆட்டம் தொடர்கிறது இனி மேடையிலிருந்து வீழும் வரை கோமாளியின் தர்பார்தான்.

எனது இரண்டு கவிதைகளின் கன்னட மொழியாக்கம்

எனது இரண்டு கவிதைகளின் கன்னட மொழியாக்கம் இன்றைய விஜயவாணி கன்னட தினசரியில் வந்துள்ளன. மொழியாக்கம் செய்த கன்னட கவி கார்பென்டருக்கும், உதவிய நண்பர் சீனிக்கும் சிவாஜிகணேசனின் முத்தங்கள்.. ತಮಿಳು ಕವಿ ಇಸೈ ( Isai Karukkal ) ಅವರ ಎರಡು ಪದ್ಯಗಳ ಅನುವಾದ ಇಂದಿನ ವಿಜಯವಾಣಿ ಪತ್ರಿಕೆಯಲ್ಲಿ ಪ್ರಕಟಗೊಂಡಿದೆ. ಅನುವಾದವನ್ನು  Srinivasan Kannan  ಅವರ ನೆರವಿನಿಂದ ಮಾಡಿದ್ದೇನೆ. please watch today's Vijayavani daily. Tamil poet Isai's Kannada translated poems have published (translation:  VR Carpenter )