அதிகாலை நடை உடம்புக்கு நல்லது. அது கொழுப்பை குறைத்து இதய நோய்கள் நம்மை அண்டாமல் காக்கிறது. சர்க்கரை அளவை பராமரிக்கிறது. இளங்காற்றை சுவாசிக்கத் தருகிறது. கரும்பச்சை மரங்கள் காண அழகு. புள்ளொலி கேட்டு புதுமலர் பார்க்கலாம் தூணிலும் துரும்பிலும் இருக்கிறாரோ என்னவோ கடவுள் மிருதங்கத்தில் இருக்கவே செய்கிறார். அள்ளி முடியாத வனிதையர் கோலம் அது திருக்கோலம். இன்னொருவன் சொல்கிறான்.... "அதிகாலையிலேயே வீட்டை விட்டு ஓடிப்போவதற்குத் தான் வாக்கிங் போவதென்று பெயர்".