Skip to main content

வருக என் வாணிஸ்ரீ

  
நீ எங்கு தான் இருக்கிறாய்  வாணிஸ்ரீ?
உன் தூக்கிக்கட்டிய கொண்டையை நான் காணவேண்டாமா ?
இந்த மழைக்காலத்தில்
எல்லா பேருந்து நிறுத்தத்திலும் ஆள் நிறுத்தியிருக்கிறேன்.
சன்னலோரம் அமர்ந்து
நீர்த்துளிகளைப் பிடித்து விளையாடியவாறு
நீ வந்துவிடுவாயென..
எல்லோரும் திரும்பி வந்து உதட்டைப் பிதுக்குகிறார்கள்.
குருட்டுப்பிச்சைக்காரனுக்கு
சாலையைக் கடக்க உதவிக்கொண்டிருந்தாள் ஒருத்தி..
நான் ஓடிப்போய்
நீ வாணிஸ்ரீ தானே என்று கேட்டேன்.
அவளும் உதட்டைப் பிதுக்கி விட்டுப் போகிறாள்.
நீ வந்து அழகானதொரு கிண்ணத்தில்
                  செக்கச்சிவந்த உன்உதிரம் நிரப்பித் தரவில்லையென்று தானே
இப்படி   கள் மேல் காதல் கொண்டு திரிகிறேன்.
எங்கு தான் இருக்கிறாய்  வாணிஸ்ரீ?
வந்துகொண்டிருக்கிறாயா
அல்லது
இல்லவே இல்லையா ?


Comments

மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்....

தங்களின் தகவலுக்கு :

கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...