பூங்காவின் புதரண்டையில் இன்பம் விளைகிறது.
ஒரு திருட்டுமாங்காய் பறிக்கப்படுவதைப் பார்த்தேன்.
என் கண்ணிரண்டில்
ஒன்று, சொல்பேச்சு கேட்பது
மற்றொன்றோ , அடங்காபிடாரி
அது முகத்தை விட்டுப்பறந்து போய்
திருட்டைச்சுற்றி வட்டமடிக்கிறது.
திருட்டுக்கை
திருட்டு மார்பைத்தொட்டு
திருட்டுசுகம் எழுகிறது
குழந்தைகளின் ஊஞ்சல்கள் பூப்படைந்து விட்டன போலும்
அவை தமக்குள் ஏதோ கிசுகிசுத்துக் கொள்கின்றன.
அம்மாக்கள் சிரிப்பாணி பூக்க,
மாலைநடைக்காரர்கள் குரங்குரூபம் கொள்கிறார்கள்.
இப்போதே
உம்மை மொய்க்கும்
எல்லா கண்களையும் ஓட்டிக்கொண்டு
இப்பூங்காவை காலி செய்ய என்னால் முடியும்.
ஆனால்
அக்கணமே உன் திருட்டுமாங்காய் சட்டென மறைந்திடுமே தம்பி ?
சாதாமாங்காய்
எப்போது ருசித்தது பிள்ளாய் ?
Comments