பாடகனற்ற   பாடகனுக்கு 
     " பாடகன் " என்கிற இரும்புக் குண்டால் 
மூச்சிரைப்பதில்லை.
மூச்சிரைப்பதில்லை.
       சபையில்லை  ;  செவிகளுமில்லை.
       பாடுதலே  கரகோஷம் என்பதால்
       எதற்கும் ஏங்கி அழிய வேண்டியதில்லை.
       தன்னைத் தானே அணைத்துக் கொள்ளும் ஜாலத்தில் தேர்ந்த பிறகு
       அச்சமில்லை ; அழுகையுமில்லை.
       பாடகனற்ற பாடகனின் பாத்ரூமில்
       ஒரு நெளிந்து வளைந்த சில்வர் பக்கெட் ...
       ஆயினும், அதனுள்ளே செழுமலைச் சுனைநீர்.
     அவன் ஹெல்மெட்டுக்குள் தால் அன்றி வேறு ஒன்றுமேயில்லை.

Comments