மடிந்தும் மடியாத சாம்பல் மாலையில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்த என் கார் திடீரென நிதானத்திற்கு வருகிறது. ஊரத் துவங்குகின்றன அதன் சக்கரங்கள். என் வெறிநோய்க்கு குறுக்கே பறந்து வருகிறது கொக்குத் திரள் உண்மையில் எனக்கு ஒரு அவசரமும் இருக்கவில்லை. இங்கிருந்து அங்கு போனாலும் அங்கிருந்து எங்கு போனாலும் நான் ஒரே ஒரு ஆள்தான் உண்மையில் எனக்கு எந்த அவசரமும் தேவையில்லை. நான்கைந்து கொக்குகள் காரின் கூரையை மொய்த்துச் சுற்ற அடைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கதவுகளை கடந்து போயின இரண்டு |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments