மடிந்தும் மடியாத சாம்பல் மாலையில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்த என் கார் திடீரென நிதானத்திற்கு வருகிறது. ஊரத் துவங்குகின்றன அதன் சக்கரங்கள். என் வெறிநோய்க்கு குறுக்கே பறந்து வருகிறது கொக்குத் திரள் உண்மையில் எனக்கு ஒரு அவசரமும் இருக்கவில்லை. இங்கிருந்து அங்கு போனாலும் அங்கிருந்து எங்கு போனாலும் நான் ஒரே ஒரு ஆள்தான் உண்மையில் எனக்கு எந்த அவசரமும் தேவையில்லை. நான்கைந்து கொக்குகள் காரின் கூரையை மொய்த்துச் சுற்ற அடைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கதவுகளை கடந்து போயின இரண்டு |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments