அவசரத்தில் இருக்கும் இளம் பெண் ஸ்கூட்டியை விட்டு இறங்காமலேயே மாகாளியம்மனின் வாசலில் காலூன்றிப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறாள். ஒரு அவசரமுமின்றி ஆடி அசைந்து வெளிவரும் ஒரு மூதாட்டி தன் கைக்குழியை ஒற்றி எடுத்து பூசி விடுகிறாள் அவளுக்கு. பிசிறை கண் மறைத்து ஊதியும் விட்டாள் அந்த ஊதலில் வந்த இசை தூரத்தில் இருந்த ஒருவனுக்குத் தெளிவாகக் கேட்டது. யாரோ யாருக்கோ தீற்றி விடும் திருநீரில் யாரோ ஒருவனின் ஏதோ ஒன்று குணமடைகிறது தன் கை ஒன்றுமில்லாத இந்தக் காரியத்தைக் காணும் தேவியின் வதனத்தில் ஒரு பூரித்த புன்னகை. |
உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும் அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில் மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு வேறொரு காதல் இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

Comments