Skip to main content

அந்த வானம்



டுச்சாமத்தில்

கொஞ்சம் துணிகளோடு

வீட்டை விட்டு வெளியேறிய அன்று

மேலே வானம் இருந்தது

ஊசிக் கப்பலும்

புறாக்களின் குட்டிகரணமும் பார்த்த

அந்த வானம் அன்று

அது வேறு


வேடிக்கைகள் விடைபெற்ற பிறகு

முதன் முதலாக

எப்போது அண்ணாந்து பார்த்தேன்

என்பது நினைவில்லை

ஆனால்

அப்போது அழுது கொண்டிருந்தேன்

அது நினைவில் இருக்கிறது.


சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த 

ஒரு உயிரை

சட்டெனச் சரித்து விட்டு

எழுந்து போகிறது இன்னொரு உயிர்

கீழே விழுவது

வானத்தில் விழுகிறது


'புற்று ' உறுதியாகிவிட்ட நாளில்

மருத்துவமனையிலிருந்து

ஏன் வானிற்கு

நடந்து போகிறாள் ஒருத்தி?


அந்தி என்பது

வண்ணக் கலவைகளின் கும்மாளம் என்று நம்பும் ஒருவன்

தன்னை 

ஓவியன் என்றும் நம்பிக் கொள்கிறான்


அம்மாவை எரித்துவிட்டு வந்த நாளில்

தெரிந்ததொரு வானம்

வானம் என்றால்

என்னவென்று சொல்லும் 

ஒரு வானம்


Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை