“இ ங்க வந்து பாருங்க, கிளி கொஞ்சுது” என்றாள் மனைவி. நான் வீட்டுக்கு வெளியே சென்று வானத்தைப் பார்தேன். மரங்களைப் பார்த்தேன். அவள் வீட்டுக்குள் அழைத்து வந்து பாத்ரூமைக் காட்டினாள் குறும்புக் குழந்தையின் குட்டிக் காதென மொழியைத் திருகி விட்டுவிட்டு அடுத்த வேலைக்கு நகரும் இவரா இவரா இவரா என் மனைவி?!