Skip to main content

CCTV யின் தலையில் ஒரு CCTV



“நீங்கள் CCTV யால் கண்காணிக்கப்படுகிறீர்கள் “

இந்த வாசகம் 

இப்போது 

பரவலாகக் காணக்கிடைக்கிறது.


பெரு நகர வீதி முதல்

சிறு வணிகக் கூடம் வரை

இதற்கென்று ஒரு இடம்

உறுதி செய்யப்பட்டுவிட்டது.


CCTV-  க்கு முன்பே

கண்காணிப்பு பிறந்து விட்டது


கண்காணிப்பே!

நீ

இந்த பூமியில் பிறந்த 

இரண்டாவது மனிதனின்

உடன் பிறப்பு தானே?


போலீஷ் என்கிற  CCTV


முதலாளி என்கிற  CCTV


நீதியிலிருந்து மனிதன் தப்பிவிட  முடியுமா என்ன?


எல்லாவற்றையும் பார்த்துக் 

கொண்டிருக்கிறார் கடவுள்

CCTV - யைப் போல 


ஒருவனுக்கு 

இன்னொருவன் CCTV


அவனை அவனே

உற்று நோக்கும் தருணத்தில்

அங்கு தோன்றுகிறது

ஒரு  CCTV


பேரன்பு எனில்

அது பெரிய  CCTV யா என்ன?


வீடு

வீதி வரை வந்து 

வழியனுப்பி வைத்துவிடுவதாக  

எண்ணிக் கொண்டிருப்பது

நமது கற்பிதங்களில் ஒன்று


நமது வீடுகளின் உச்சியில் 

கழுத்தை நீட்டிக் கொண்டு

ஒரு பலஹீனமான உபகரணம்


ஈசனின் தலையில்

உடைந்த பிறை போல.


Comments

Thendral said…
ஈசனின் தலையில்

உடைந்த பிறை போல. Nalla karpanai 😇

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை