Skip to main content

Posts

Showing posts from June, 2025

சார், ஒரு சின்ன உதவி

  உ ங்கள் முன் அன்பு வெறுப்பு என்று இரண்டே இரண்டைக் காட்டினாரே  அவர் நிஜமாலுமே அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும்தான். அதே அளப்பறிய கருணையாளன் இதோ…என் முன்  எண்ணற்ற விதவிதங்களை  உருட்டி விடுகிறார் அன்பு போல் தோன்றும் வெறுப்பு வெறுப்பு போல் தெரியும் அன்பு அன்புதான் என்று உறுதி சொல்லமுடியாத அன்பு வெறுப்பென்று இறுதி  செய்துவிட முடியாத  வெறுப்பு அன்பின் வெள்ளைக்கரு மூடிய வெறுப்பின் மஞ்சள் கரு முக்கால் வெறுப்பில்  துளியூண்டு     அன்பைக் கலந்து   கடைந்த  ஒன்று முழு அன்புள்  நெளியும்  வெறுப்பின் சிறு புழு அன்பின் ஆடை அவிழ்ந்து விடாமல்  காக்கும்  வெறுப்பின் இடைக்கச்சை வெறுப்பின் வதனத்தில் அன்பின் அழகிய மைத்தீற்றல் ரஹ்மான் சார், எனக்கு ஒரு நல்வழி காட்டக் கூடாதா?

இரண்டு கவிதைகள்

  1 ம னசு தோள் மீது கைவைத்து மெல்ல அழுத்தி "மனசைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்.." என்றான் இத்தனை ஆண்டு கால நட்பில் நானும் அவனும் மனசைக் குறித்து ஒரு முறை கூட பேசிக் கொண்டதில்லை. நான் உறுதி பூண்டேன்.. காவல் காத்தேன். மனசைப் பார்ப்பதைத் தவிர வேறொன்றையும்  பார்க்கவில்லை ஆயினும் பார்க்கப் பார்க்கவே நான் பார்க்கப் பார்க்கவே அது  பத்திரத்துக்கு அப்பால் சென்று கொண்டிருக்கிறது * 2 கு ட்டிச்சுவர் மீதொரு குட்டிச்சுவர் இருளில் மூழ்கிக் கிடக்கும் இந்தக் குட்டிச்சுவர் மீது கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தால் கண்ணீர் குறையும்  என்று தோன்றுகிறது அதுதானே என் தொட்டில் 

பச்சைப் பலகையே! பச்சைப் பலகையே!

  பெசண்ட் நகர்- 9 கி.மீ என்று போட்டிருந்தது. ஒன்பது கிலோ மீட்டர் ஒன்பதே கிலோ மீட்டர் எவ்வளவு அழகான 9 ! பஸ்ஸில் போகலாம் பைக்கில் போகலாம் ஆட்டோவில் போகலாம் வாடகைக் காரில் போகலாம் ஒரு கார் வாங்கி அதில் கூடப் போகலாம் அம்புக் குறி காட்டும் வழியில் எவ்வளவு மெதுவாக நடந்தாலும் அந்திக்குள் அடைந்து விடலாம் ஆனாலும் அந்த ஊரை நீ  இப்படி கூவிக் கூவிக் நிறைக்காதே! காதுக்குள் முழக்காதே!