
1 மனசு தோள் மீது கைவைத்து மெல்ல அழுத்தி "மனசைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்.." என்றான் இத்தனை ஆண்டு கால நட்பில் நானும் அவனும் மனசைக் குறித்து ஒரு முறை கூட பேசிக் கொண்டதில்லை. நான் உறுதி பூண்டேன்.. காவல் காத்தேன். மனசைப் பார்ப்பதைத் தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை ஆயினும் பார்க்கப் பார்க்கவே நான் பார்க்கப் பார்க்கவே அது பத்திரத்துக்கு அப்பால் சென்று கொண்டிருக்கிறது * 2 குட்டிச்சுவர் மீதொரு குட்டிச்சுவர் இருளில் மூழ்கிக் கிடக்கும் இந்தக் குட்டிச்சுவர் மீது கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தால் கண்ணீர் குறையும் என்று தோன்றுகிறது அதுதானே என் தொட்டில் |
Comments