Skip to main content





எழுபது கடல் எழுபது மலை

எழுபது கடல் எழுபது மலை தாண்டி
எங்கோ இருக்கிறது
நான் தழுவ வேண்டிய உடல்
கடலெங்கும் சுறாக்கள் அலைகின்றன
மலையெங்கும் கொடுங்காவல் நிலவுகிறது
முதல் கடலின் பாதியில் நிற்கிறது
எரிபொருள் தீர்ந்த படகு
நான் ரொம்பவே சோர்ந்துவிட்டேன்
தாகமாய் தவிக்கிறது எனக்கு
இவ்வளவு பெரிய கடலுக்கு நடுவே
எனக்கு ஒருவாய் நீரில்லை
இன்னும் 69 1/2 கடல்களும்
எழுபது மலைகளும் மீதமிருக்க
துளியும் எள்ளலின்றி
குரல் தழுதழுக்கச் சொல்கிறேன்
“யாம் ஷகிலாவின்
பாத கமலங்களை வணங்குகிறோம்”

- நன்றி: உயிர் எழுத்து

Comments

Anonymous said…
aam.poankiperkum nam kaamathai eattru nirkum pen theaivam ival
ஆத்தாடியோவ்.
:-))))))))
Unknown said…
இது என்ன எழவு கவிதை..
சுத்தமான ஆணாதிக்க பார்வை உனக்கான உடல் இல்லை என்றால் ஷகிலாவை தேர்ந்தெடுப்பாயா..
உன் தோழி இப்படி தேர்ந்தெடுத்தால் உனக்கு சம்மதமா..இல்லை தோழி நீங்கள் ஷகிலாவை வைக்கும் இடத்தில் உங்களை வைத்திருந்தால் சம்மதமா..
இதை ஒரு பெண் எழுதியிருந்தால் பிடித்து கொதறி இருப்பீர்கள் நீங்கள் ஆண் எதுவேண்டுமானலும் எழுதலாம் அதற்கு பின்முன் இடை நவீனத்துவ விளக்கம் வேறு தரலாம் இதெல்லாம் காலகொடுமை

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம