Skip to main content

அப்போது அந்தமுகத்தில் ஒரு சிரிப்பிருந்தது.விழிக்கடையில் கொஞ்சம் நீர் சேர்ந்திருந்தது

ராமகிருஷ்ணன் தான் பிறப்பதற்கு முன்பே
அவர் தாயை
ஆயிரம் முறைக்கும் அதிகமாக
அரசமரத்தை சுற்ற வைத்தார்.
அம்மன் சன்னிதிகளில் அவள் உருண்டு உருண்டு மண்ணானாள்.
நாளெல்லாம் விரதமிருந்தாள்.
இப்படி வாராது வந்த மாணிக்கத்திற்கு
பேச்சு வரவில்லை சரியாக.
அவள் மீண்டும் அலகு குத்தி
காவடி சுமந்து
தீக்குண்டம் இறங்கியேற
அவர் தன் எட்டாம் வயதில் திருவாய்மலர்ந்தார்.
அவர் விண்ணப்பித்த எல்லா பணியிடங்களும்
அதற்கு முந்தைய நாளில் நிரப்பப்பட்டிருந்தன.
"பத்துநாட்களுக்கு முன்னால் சொல்லியிருக்ககூடாதா" என்று
அவர் காதலி அழுது வடிந்தாள்.
அவர் அத்தனை நாளும்
அவளைப் பற்றிய ஒரு காவிய முயற்சியில் மூழ்கியிருந்தார்.
33 மூன்றாம் வயதில் திருமணம் முடிந்த அவருக்கு
5 வருடங்கள் கழித்து
அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இப்போது நரை முற்றி உடல் உளுத்து
துள்ளிதுள்ளி இருமும் அவருக்கு
ஒரு சாவுவந்து தொலையமாட்டேன் என்கிறது.
இந்த நகரத்தின் எல்லா மருத்துவமனைகளிலும்
அவர் உடல் பரிசோதுக்கப்பட்டு குறிப்பெழுதப்பட்டு விட்டது.
இந்த புதிய மருத்துவமனியின் புதிய மருத்துவர்
புதியதொருகுறிப்பிற்காய் பெயரை வினவிய போது
அவர் சொன்னார்
"லேட் ராமகிருஷ்ணன்"

Comments

முகத்தில் சிரிப்பும், விழிக்கோடியில் நீரும்தான் வருகிறது. ரசித்தேன்.
க ரா said…
என்னன்னு சொல்ல இந்த கவிதைய பத்தி. சொல்லாமல் சொல்லும் சோகமாக படுகிறதுதெனக்கு...
:)
இந்த கருப்பு நகைச்சுவை என்ற சுவை இருக்கிறதே :)
இதுக்கு தான் ராமகிருஷ்ணன் பிறக்காமயே இருக்க முயற்சி பண்ணியிருக்கார், அவர் அம்மா சும்மா விட்டாங்களா :)
அல்லது இந்தக்கவிதை இப்படி எழுதப்பட்டு ராமகிருஷ்ணன் இப்படி அல்லலுற வேண்டும் என்பது உங்களையும் மீறிய முன்னமே எழுதப்பட்ட விதியா :)
வாழ்வில் விளையாடும் மதியால் வெல்ல முடியாத விதியை என்னவென்று சொல்வது :(
எல்லாம் எல்லாம் யோசிக்கும் வேளையில்,,,,,,,,,
எல்லாம் எல்லாம் முடிந்து விடுகிறது

நல்ல கவிதை நண்பா

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம