Skip to main content

குட்டி குட்டியாக சில பிரமாதமான வாழ்க்கைகள்

” இந்த வாழ்வு தாறுமாறான பீட்டில் பாடப்படும்
மோசமான பாடல் ”
என்று சொல்வார் சின்னதங்கம் பீட்ட்ர்ஸன்.
அதனால் தான் அதற்குள்
குட்டி குட்டியாக சில பிரமாதமான பாடல்கள்.
ஒரு பாடல் என்னையும் என் வாகனத்தையும்
ஓட்டிச் செல்கிறது..

ஒரு நாள்,
அது சைக்கிள் சிறுவர்கள்
கையசைத்து கடந்து செல்கிற
PBS வாகனம்.
பெருநகர சாலையின்
வெள்ளைக் கோட்டிற்கு இப்புறம்
கருங்குயில்கள் பறந்து திரியும்
நந்தவனம்...

மறு நாள்,
அது பித்தம் முற்றிய ஒரு மேற்கத்தியனுடையது.
ஹாரனின் ஊளையை இன்னொரு கருவியிசையாக்கிக் கொண்டு
நூலிடைச்சந்துகளில் புகுந்து வளைந்து
களிபீடித்தாடுவது...

ஒரு பாடல் என்னையும் என் வாகனத்தையும்
ஓட்டிச் செல்கிறது...

நானும் ஆண்ட்ரியாவும்
கடவுளாகிக் கொண்டிருக்கையில்
குறுக்கிட்டதொரு பெரிய டேங்கர் லாரி
மண்டை உடைந்து இரத்தம் வழிகிறது
ஆனந்தம்..
பரமானந்தம்..

( ஜான் சுந்தருக்கு..)

Comments

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

அதிர்ச்சி ரிப்போர்ட்

க டைசியில் அவன் அறிந்து கொண்டான் அவள் இல்லாத போதுதான் தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்கிற உண்மையை அதனினும் கடைசியாக அவன்  திடுக்கிட்டு அறிந்ததுவோ... மகிழ்ச்சியாக இருப்பதில்தான் என்னவோ  சிக்கல் அவனுக்கு

வெண்டை விரல்களுக்கெதிரான விடுதலைப்பாட்டு

  பி யானோ வகுப்பில் இன்று புதிய பாடம் என் மாஸ்டர் அதிகம் பேசமாட்டார் அவ்வப்போது முறைப்பார் இன்றோ மூன்றுமுறை முறைத்துவிட்டார் கடைசியில் என் கை பாடிவிட்டது  சமதளத்திலிருந்து சற்றே நீண்டு ‘ஷர்ப்’ பைத் தீண்டுகையில் என் விரல்களை நான் கண்டேன். ஆஹா…! என்னுடையதோ இவை… இத்தனை  ஜ்வலிப்போ இதற்கு… நீந்து மீனோ.. தாவு அணிலோ.. தெய்வம் என்று பெயர் பெற்ற மூடமே! என்னுடை விரல்களை என்னுடை  கண்களில் காட்ட 47 ஆண்டுகள்  வேண்டுமோ உமக்கு?